Skip to main content

செக்களவு பொன் இருந்தாலும் ...(புறநானூறு -184)


செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கி உண்டால் எத்தனை நாளைக்கு என்பார்கள்.


அது அனுபவத்தில் வந்த சொற்கள். அதை ஒரு புறநானூற்றுப் பாடல் இன்னும் விரிவாகக் கூறுகிறது. 


மத்திய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது ஒரு சங்கப் பாடலை மேற்கோள் காட்டினார் நிதியமைச்சர். அப்போது அந்தப் பாடலைக் கூறி தமிழ்நாட்டு எம்பிக்கள் இருக்கின்ற திசையைப் பார்க்க, அவர்களோ      தலையைக் கவிழ்ந்து அமர்ந்திருப்பதையும்  சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்ததையும் டிவியில் பார்த்தோம். அந்தப் பாடல் இதுதான்.

 

 காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போலத்

தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

(புறநானூறு -184)

(பாண்டியன் அறிவுடை நம்பியை பிசிராந்தையார் பாடியது.)

திணை: பாடாண்.

துறை: செவியறிவுறூஉ.

 

 

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால்,ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.

ஆனால்நூறு வயல்கள் இருந்தாலும்யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.

அரசன் அறிவில் குறைந்தவனாகிமுறை அறியாதபுகழ்பாடும் கூட்டத்தோடு  ஆரவாரமாக மக்கள் அன்பு கெடுமாறு,  நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால்யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் அந்நாடும் கெடும்.

 

சொற்பொருள் விளக்கம்:

காய் நெல் - விளைந்த நெல்.

மா - ஒருநில அளவு (ஒருஏக்கரில் மூன்றில் ஒருபங்கு).

செறு - வயல்

தமித்து - தனித்து

புக்கு - புகுந்து.

யாத்து - சேர்த்து

நந்தும் - தழைக்கும்.

வரிசை - முறைமை

கல் - ஒலிக்குறிப்பு.

பரிவு - அன்பு

தப - கெட

பிண்டம் - வரிபொருள்

நச்சின் - விரும்பினால்.

புலம்-வயல்

கவளம்- உணவு.

 

தொடர்புடைய செய்திகள்:

 மதுரையை ஆண்ட பாண்டியன் அறிவுடை நம்பி புறநானூற்றில் 188 வது செய்யுளை இயற்றியுள்ளான்.  தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் அதிக வரி வாங்கினான். அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறும் வகையில்   இந்தப்  பாடலைப் பாடி விளக்கினார் பிசிராந்தையார்.

 

பாடாண்  என்னும் புறத்திணை ஒருவருடைய புகழ், வலிமைகொடைஅருள் ஆகிய  நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

செவியறிவுறூஉ என்னும் புறத்துறை அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்துவது.

யானைபுக்க புலம் என்னும் உவமை இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...