மிக லேசான பொருட்கள் நிலை தவறி அவ்வளவு எளிதில் கீழே விழுவதில்லை.
அப்படியே விழுந்தாலும் பெரிதும் அடிபடுவதில்லை. அதனால் உடைவதில்லை.
அதுபோல,
அற்பமான மனிதர்கள் தம் நிலைகெட்டாலும் மீண்டும் பொய்யும் புரட்டுமாக எதையாவது செய்து மீண்டு விடுவார்கள்.
ஆனால் நேர்மை, நியாயம் என்று வாழ்ந்து வரும் ஒரு பணக்காரன் நிலை தவறி வறுமையடைந்தால் மீண்டும் தன் பழைய நிலையை எய்துவது கடினம்.
மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப
வலியார்மற் றொன்றானு முய்யார் - நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமா லுய்யா பிற.
(நீதிநெறி விளக்கம்)
Comments
Post a Comment
Your feedback