Skip to main content

கண்டதும் காதல்

 

வைகை ஆற்றில்  பொங்கிப் பெருகும் புதுவெள்ளம்.


அவன் இளைஞன்.  தண்ணீரில் பாய்கிறான்.

 

 வாழை மரத் துண்டைத் தழுவியபடி  ஆனந்தமாக நீந்தி விளையாடுகிறான்.

 

கரையோரம் சில பெண்கள் நின்றிருந்தார்கள்.

 

அவர்களில் ஒருத்தியை அவன் பார்த்தான்.

 

அவள் மேல் (கண்டதும்)காதல் கொண்டான்.

 

 ஓடும் வைகை நதி அவன் உடம்பைப் பிடித்து இழுக்,

 

இந்தப் பெண்ணின் அழகு அவனுடைய மனத்தைப் பிடித்து இழுத்தது.

 

அவளுக்கும் அவன்மீது ஆசைதான்.

 

 ஆற்றின் போக்கில் நீந்திக்கொண்டுபோன அவனை அவள் அங்கேயே

நின்று வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

 

இந்த ஆற்றுக்குக் காதலர் மனம் புரியவில்லையே!

 

அவனை அவள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லாமல் வேறு

 

எங்கோ கூட்டிப் போகிறதே.

 

இதென்ன நியாயம்?

 

அவள் தன்னையும் மறந்தாள்;

தன்னுடைய தோழியரையும் மறந்தாள்.

அவனைப் பின்தொடர்ந்து கரையோரமாகவே நடந்தாள்.


இப்படி நடந்து போவதை பார்த்துக் கொண்டிருக்கின்ற தோழிகள் என்னவெல்லாம் சொல்லி அந்தப் பெண்ணைக் கேலி செய்திருப்பார்கள்? எத்தனை பேரிடம் சொல்லிச் சிரித்திருப்பார்கள்?

 

தண்டு தழுவாத் தாஅவு நீர் வையையுள்

கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க

நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க

நேர் இழை நின்று உழிக்கண் நிற்ப நீர் அவன்

தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப

ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ

(பரிபாடல்)


 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...