Skip to main content

சிலப்பதிகாரப் பாடல் திரைப்படத்தில்


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்இளங்கோடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு பாடல் திரைப்படப் பாடலாகவும் பாடப்பட்டுள்ளது.


கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து வர, மாதவி பாடிய ஒரு கானல் வரிப்பாடல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதே காரணம்.

அந்தப்பாடல் தான் ஒரு திரைப்படப் பாடலாகப்பட்டது. 


சலீல் சௌத்ரி என்ற வங்கமொழி இசையமைப்பாளரின் இசையில்

P சுசீலா மற்றும் K J யேசுதாஸ் ஆகியோர் தனித்தனியே அந்தப் பாடலைப் பாடியிருக்கின்றனர். அந்தப் பாடல்கள் 1973 ஆம் ஆண்டு ராமுகாரியத் என்ற இயக்குநரின் இயக்கத்தில் தயாரான கரும்பு என்ற படத்துக்காக எடுக்கப்பட்டன. 


சிலப்பதிகாரத்தில் அந்தப் பாடல் இடம்பெறும் கோவலன் பிரிந்து செல்லும் சூழலைக் கருத்தில் கொண்டு சக்கரவாகம்( chakravaaham) என்ற ராகத்தில் K J யேசுதாஸ் பாடியிருக்கிறார். அதே பாடலை ஒரு விழாக் கொண்டாட்டத்தில் பாடுவது போல குழுவினரோடு சேர்ந்து P சுசீலா பாடியிருக்கிறார். என்ன காரணத்தினாலோ படம் வெளியாகவில்லை.


அந்தப் பாடலின் வீடியோ இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்தப் பாடலைக் கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும். அதற்கு முன்பாக பாடல் வரிகளை ஒருமுறை படித்து விட்டுப் பிறகு பாடலைக் கேளுங்கள்.


திங்கள் மாலை வெண்குடையான்

சென்னி செங்கோல் அது ஓச்சி

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவாய் வாழி காவேரி 

புலவாய் வாழி காவேரி 


கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவாதொழிதல் கயற்கண்ணாய் 

மங்கை மாதர் பெருங்கற்பென்று

அறிந்தேன் வாழி காவேரி 


மன்னும் மாலை வெண்குடையான்

வளையாச் செங்கோல் அது ஓச்சி

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்

புலவாய் வாழி காவேரி 

புலவாய் வாழி காவேரி 


கன்னி தன்னைப் புணர்ந்தாலும்

புலவாதொழிதல் கயற்கண்ணாய் 

மன்னும் மாதர் பெருங்கற்பென்று

அறிந்தேன் வாழி காவேரி 


உழவர் ஓதை மதகோதை

உடை நீர் ஓதை தண்பதம் கொள்

விழவர் ஓதை திறந்தார்ப்ப

விழவர் ஓதை திறந்தார்ப்ப

நடந்தாய் வாழி காவேரி 

நடந்தாய் வாழி காவேரி 


விழவர் ஓதை திறந்தார்ப்ப

நடந்ததெல்லாம் வாய்காவா

மழவர் ஓதை வளவன் தன்

வளனே வாழி காவேரி 


 

பாடலைக் கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும். 

K J யேசுதாஸ் பாடிய பாடல்

P.சுசீலா பாடிய பாடல்


சிலப்பதிகாரம் பற்றி நாம் அறிந்த செய்திகளை மறுபடியும் நினைவுப்படுத்தவே பின்வரும் செய்திகள்.


இளங்கோவடிகள், தம் காப்பியத்தில், நாட்டியம், இசை ஆகிய இரு கலைகளையும் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கின்றார். 

முப்பது காதைகளுடைய காப்பியத்தில், நான்கு காதைகள் மக்களின் ஆடல் பாடல்களைப் பற்றியே அமைந்துள்ளன. அவை கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, குன்றக்குரவை ஆகிய பகுதிகளாகும். 

கானல்வரியில் கடற்கரைச் சோலையிலுள்ள மீனவர்களின் பாடல்களும், காவிரி ஆறு பற்றிய பாடல்களும் அமைந்துள்ளன.

 வேட்டுவவரியில் காளியை வழிபடும் வேடர்களின் பாடல்களை அமைத்துள்ளார். 

 ஆய்ச்சியர் குரவையில் கண்ணனை வழிபடும் இடையர் மகளிரின் ஆடலும் பாடலும் உள்ளன.

குன்றக்குரவையில் மலைப்பகுதியில் வாழும் மக்களின் ஆடல் பாடல்கள் உள்ளன. 

இவை நான்கும் தவிர, இருபத்தொன்பதாவது காதையில் பலவகை நாட்டுப் பாடல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளார். 

பெண்கள் கூடியிருந்து விளையாடும் அம்மானைப் பாடல், பந்தடித்துப் பாடும் கந்துகவரி, ஊசலாடிப்பாடும் ஊசல்வரி, நெல்குற்றும்போது பாடும் வள்ளைப்பாட்டு என்பவற்றை அமைத்துள்ளார். இவையெல்லாம் இளங்கோவடிகளின் கலையுள்ளத்தையும், மக்களின் ஆடல் பாடல்களைப் போற்றி மதித்த பண்பையும் வெளிப்படுத்துகின்றன. 

தமிழர்களின் இசை இலக்கண நூலாகவும் சிலப்பதிகாரம் விளங்குகிறது. வாழ்த்துப்பாடல், அரங்கேற்றுகாதை, கானல்வரி, வேனிற்காதை, வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, துன்பமாலை, ஊர் சூழ்வரி, வஞ்சினமாலை, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியன அக்கால இசைக்கலையைப் பற்றியும் இசைப்பாடல் அமைதி பற்றியும் விளக்குகின்றன.


மாதவி, தன் நாட்டியக் கலையை ஒரு நாட்டிய ஆசிரியரிடம் மட்டும் பயிலவில்லை. 

அவ்வாசிரியருடன், இசை, தண்ணுமை, குழல், யாழ் ஆசிரியர்களிடம் தனிப்பயிற்சி (Tuition class) பெற்று கலையரசியாக தன்னை உயர்திக்கொண்டாள். 



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...