Skip to main content

தை நீராடித் தவம் இருந்து...


மார்கழி முடிந்து வரும் தை தெளிந்த நீர் ஓடும் காலம். 

"நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்மாரும்”, 

 (பரிபாடல்)


கார் கால நீர் போலன்றி, தெளிவாக இருக்கும் தை மாத நீர், பளிங்கு போல இருக்கிறது.

அதிகாலையில் இளம் பெண்கள் துயிலெழுவது, எல்லோரும் சேர்ந்து குளிர்ந்த நீர்நிலைகளுக்குச் செல்வது, அதில் நீராடி நல்ல கணவனை அருளுமாறு நோன்பிருப்பது ஆகிய வழக்கங்கள் சங்ககாலம் முதற்கொண்டே நம் மக்களிடையே நிலவி வந்திருக்கின்றன.

 தைத் திங்களில் இந்த நோன்பினை இளம் பெண்கள் மேற்கொண்டனர். 


புறநானூறு:

ஆவணி மாதம் முதல் பெய்த மழையால் ஆறு குளங்கள் எல்லாம் நிரம்பி அதன்பிறகு பெய்த பனியாலும் வாடைக் காற்றாலும் தைத் திங்களில் நீரெல்லாம் குளிர்ந்து கிடக்கும்.

"தை இத் திங்கள் தண்கயம் போலக்

கொளக் கொளக் குறையா கூழுடை வியனகர்"

(புறநானூறு)

அதாவது தைத் திங்களின் தண்மையான குளம்போல அள்ள அள்ளக் குறையாத அன்னம் நிறைந்த வீடுகளை உடைய பெரிய நகரங்களை உடையதாம் கிள்ளி வளவனின் நாடு.

குறுந்தொகை:

"பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

வெய்ய உவர்க்கும் என்றனிற்"

 (குறுந்தொகை)

அதாவது முன்பு, வேம்பின் பசுங்காயைத் தந்தாலும் பூந்தேனின் இனிய கட்டி இது என்று போற்றிய நீங்கள் இப்போது, தை மாதத்தின் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையிலுள்ள இனிய சுனை நீரைக் கொடுத்தாலும் வெம்மையாக இருக்கிறது. உவர்ப்பாக இருக்கிறது என்கின்றீர்! என்று குறைப்பட்டுக் கொள்கிறாள் ஒருத்தி!

நற்றிணைப் பாடல்:

தை நீராடும் இளம் பெண்களைப் பற்றி நற்றிணைப் பாடல் ஒன்று நல்ல கணவனைப் பெறவேண்டி தைத் திங்களில் குளிர்ந்த குளத்து நீரில் நீராடும் ஓர் இளம் பெண்ணை நமக்குக் காட்டுகிறது...!

"இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇ

தைஇத் திங்கள் தண்கயம் படியும்

பெருந்தோட் குறுமகள் அல்லது

மருந்து பிறிது இல்லை யான்உற்ற நோய்க்கே" 

(நற்றிணை)

 நாணம் மிக்க இளம் பெண்ணான அவள் தன் தோழிகளோடு கூடிச் சென்று தைத் திங்களில் குளிர்ந்த நீரால் நிரம்பிக் கிடக்கும் குளத்தில் நீராடி நோன்பிருக்கிறாள். அப்போது, 

 "தான் உற்ற காதல் நோய்க்கு அவளே மருந்து' எனக் கூறுகிறான் இளைஞன் ஒருவன். 

 அம்பா ஆடல்:


 மகளிர் ஆடல், "அம்பா ஆடல்' எனப் பரிபாடலில் குறிப்பிடப்படுகிறது. 

திருமணம் ஆகாத இளம் பெண்கள் தம் தாயர் அருகிருக்க நீராடுவதால், "அம்பா ஆடல்' என்று அழைக்கப்பட்டதாக விளக்கம் கூறுவர். "அம்பா' என்பதற்கு "அன்னை' என்று பொருள்.

 சில்லென்று பனி பெய்கின்ற தை மாதத்து வைகறைப் பொழுதில் இளம் பெண்கள் வைகை ஆற்றில் நீராடி, அதன் கரையோர மணற் பரப்பில் அந்தணர்களால் எழுப்பப்பட்ட வேள்வித் தீயின் வெப்பத்தில் தம் ஈர ஆடைகளை உலர்த்திக் கொள்ளுகின்றனர். 


"வெம்பாதாக வியல்நில வரைப்பென

 அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்

 முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்

 பனிப் புலர்பு ஆடிப் பருமண லருவியின்

 ஊதை யூர்தர உறைசிறை வேதியர்

 நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பின்

 தையல் மகளிர் ஈரணி புலர்த்தர"

(பரிபாடல்)

கலித்தொகை:

உள்ளத்தில் உள்ள நோக்கம் நிறைவேறும் பொருட்டு துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு சில ஒழுக்கம், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது நோன்பு எனப்படும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். 

 திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கும் அப்படித் தானே.

“இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள். ஆனால், வருடம் தோறும், தையில் நீராடி, நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள். என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்?” என்று ரசனையாகப்  பேசுகிறான். 

“நீ தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?”

(கலித்தொகை)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...