Skip to main content

அக்டோபர் 8

 அக்டோபர் 8: 1878

கையுறை அணிந்துகொண்டு முதன் முதல் குத்துச் சண்டை பிரிட்டனில் நடந்தது.

அக்டோபர் 8: 1881

கடல் கொந்தளிப்பால் இந்தோசீனாவில் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 8: 1908

லண்டனில் ஜீ. பிரிவர் என்பவர் முதன் முதலாக வில்பர் ரைட்டுடன் விமானத்தில் இருமுறை பயணம் செய்தார்.

அக்டோபர் 8: 1922 

அறிவியல் அறிஞர் G.N.இராமச்சந்திரன் பிறந்த நாள்.

சர்.சி.வி.இராமனின் கண்காணிப்பின் கீழ் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார். 

அதாவது சர். சி.வி. இராமன் இவரின் Ph.D Guide.  

உயிரியல் ஆய்வில் மனித உடலில் உற்பத்தியாகும் புரோட்டின் பொருளான காலஜினின் (collagen) உயிரணு எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிந்தார். காலஜினில் உள்ள மூலக்கூறுகள் முக்கோணக்கூட்டமைப்பில் உள்ளது என்பதை முதலில் கண்டுபிடித்தது இவர் தான். 

இயற்பியல் துறையில் எக்ஸ்கதிர் பற்றி ஆய்வினை  ஆய்வு மேற்கொண்டார்.  பெப்டைடுகளின் புரதக்கூறுகளின் வடிவத்தைக்  குறிக்கும் இவரது கண்டுபிடிப்பு இராமச்சந்திரன் வரைபடம் என்று அழைக்கப்படுகிறது. 

நோபல் பரிசுக்கும் கூட இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அக்டோபர் 8: 1932

இந்திய விமானப்படை ஆரம்பிக்கப்பட்டது.  இரண்டாம் உலகப்போரின் போது ‘ராயல் இந்திய விமானப்படை’ என்று குறிப்பிடப்பட்டது.

அக்டோபர் 8: 1958

பாகிஸ்தானில் ராணுவப்புரட்சியின் மூலம் அயூப்கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.  அங்கு நடந்த முதல் ராணுவப் புரட்சி அது தான்.

அக்டோபர் 8: 1959

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் காலமானார்.



அக்டோபர் 8: 1979

காந்தியவாதியும், காங்கிரசுக்கு எதிரான ஒரு புதிய அணியை உருவாக்கி வெற்றி கண்டவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் பாட்னாவில் காலமானார்.

அக்டோபர் 8: 1991

இந்தியாவில் முதன் முதல் இண்டர்நெட் சர்வீஸ் துவங்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...