Skip to main content

அக்டோபர் 28

 அக்டோபர் 28 : 1627

ஜஹாங்கீர் ஆக்ரா திரும்பும் வழியில் லாகூர் அருகே கோமா நிலையை அடைந்து மரணமடைந்தார்.

அக்டோபர் 28 : 1636

அமெரிக்காவின் முதல் பல்கலைக்கழகமாக  ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஜான் ஹார்வார்டில் முயற்சியால் அமைக்கப்பட்டது.

அக்டோபர் 28 : 1831

மைக்கேல் பாரடே டைனமோ வேலை செய்வதை செயல் விளக்கம் செய்து காட்டினார்.


அக்டோபர் 28 , 1867

சுவாமி விவேகானந்தரின் முதன்மைச் சீடரான சகோதரி நிவேதிதா பிறந்த நாள்.  

இவர் ஒரு ஆங்கில-ஐரிஷ் பெண். மார்கரெட் எலிசபெத் நோபல் என்பது இவரின் இயற்பெயர். விவேகானந்தரின் போதனைகளால் தன்னை அவரது சீடராக்கிக் கொள்ளவிரும்பி 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்தார்.  அதன் தொடர்ச்சியாக 1898ஆம் ஆண்டு ஜனவரி  28இல் இந்தியாவுக்கு வந்தார்.  நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே கல்கத்தா துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சை கொடுக்கும்போது விவேகானந்தர் அவருக்கு நிவேதிதா என்ற பெயரைச் சூட்டினார். நிவேதிதா என்றால் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு என்பது பொருள்.  

ஒரு மேற்கத்தியப் பெண் ஒரு இந்து சமயத் துறவியிடம் சந்நியாசம் பெற்றது அப்போதைய காலத்தில்  அதுவரை கேள்விப்பட்டிராத ஒன்றாக பரபரப்பாகப் பேசப்பட்டது. 

அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் இவர் மறைந்தார்.

அக்டோபர் 28, 1900

மாக்ஸ் முல்லர் மறைந்த தினம்.

டிசம்பர் 6, 1823 அன்று பிறந்தவர்.  ஜெர்மானிய இலக்கியவாதியான இவர் இந்திய இலக்கியங்களின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 

சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவதார புருஷர் என்ற கருத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் இவர் . இவர் எழுதிய "ராமகிருஷ்ணர்: வாழ்வும், வாக்கும்" (Ramakrishna: His Life and Sayings) என்ற புத்தகம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி ஒரு வெளிநாட்டினரால் எழுதப்பட்ட புத்தகங்களுள்  முதலாவதாகும். 

சுவாமி விவேகானந்தர் இவரைப் பற்றி தன்னுடைய நூலில் உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார். பால கங்காதர திலகர் சிறையில் அடைக்கப்பட்ட போது, அப்போதைய விக்டோரியா மகாராணிக்கு திலகர் விடுதலை செய்யப்பட வேண்டும். அதுவரை  சிறையில் நல்லவிதமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கடிதம் எழுதியவர் மாக்ஸ் முல்லர்.

அக்டோபர் 28 : 1924

பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய சுதந்திரச் சிலையை தேசிய சின்னம் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.


அக்டோபர் 28, 1955
மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் பிறந்த நாள். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...