Skip to main content

அக்டோபர் 24

 

அக்டோபர் 24 : 1605

அக்பரின் மகன் சலிம், ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் டில்லி அரியணையில் அமர்ந்தான்.

அக்டோபர் 24 : 1801

வெள்ளை மருது, சின்ன மருது, செவத்த தம்பி, அவன் மகன் முத்துச்சாமி, முத்துக்கருப்புத் தேவர் மற்றும் பல புரட்சியாளர்கள் திருப்பத்தூர் பழையகோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.

அக்டோபர் 24 : 1863

பங்கு பத்திரங்களை மாற்றிக் கொடுக்கப் பயன்படும் தபால்தலை இந்தியாவில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.  சுங்கத் துறைக்கான தபால் தலையும் இன்றே  வெளியிடப்பட்டது.

அக்டோபர் 24 : 1909

லண்டன் இந்திய ஹவுசில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.  இந்திய தூதுக்குழுத் தலைவராக வந்த காந்தி அதில் கலந்து கொண்டார்.

அக்டோபர் 24 : 1914

 நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கேப்டன் லட்சுமி பிறந்த நாள்.



அக்டோபர் 24 : 1921

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமண் பிறந்த நாள். 

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் தம்பி  இவர்.  

இராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் என்பது இவருடைய முழுப்பெயர். 

டைம்ஸ் ஆப் இந்தியாவில் அன்றாடம் இடம் பெற்ற இவரது கார்டூனில் வரும் 'திருவாளர் பொதுஜனம்' (Common Man)  அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களைக் கவர்ந்தவை. 

26 சனவரி 2015 அன்று இவர் மறைந்தார். 

அக்டோபர் 24 :1940

இந்திய விண்வெளித்துறையின் தலைவராக இருந்த கி.கஸ்தூரிரங்கன் பிறந்த நாள். 

பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.  

அக்டோபர் 24 : 1941

இந்தியாவில் இன்று தான் தகவல் ஒலிபரப்புத்துறை அமைக்கப்பட்டது.

அக்டோபர் 24 : 1953

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் காலமானார்.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...