Skip to main content

அக்டோபர் 4

 அக்டோபர் 4 : 1752

பிரிட்டிஷ் டொமினியன் முழுவதும் கிரிகொரியன் காலண்டர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.  

இதனால் அக்டோபர் 4ஆம் தேதிக்குப் பிறகு அக்டோபர் 15 ஆம் தேதியே அடுத்த நாளாகக் கணக்கிடப்பட்டது.

அக்டோபர் 4 : 1851

இந்தியாவின் முதல் தந்தி அலுவலகம் கல்கத்தாவிற்கும் டயமண்ட் துறைமுகத்துக்குமிடையே இயங்க ஆரம்பித்தது.

அக்டோபர் 4: 1884

சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்.

அக்டோபர் 4: 1904

திருப்பூர் குமரன் பிறந்த நாள்.

அக்டோபர் 4 : 1926

லண்டனில் எம்பயர் சினிமா ஹாலில் முதல் பேசும்படம் திரையிடப்பட்டது.

அக்டோபர் 4 : 1947

குவாண்டம் தியரியை உருவாக்கிய ஜெர்மனி இயற்பியல் அறிஞர் மாக்ஸ் பிளாங்க் ஜெர்மனியில் காலமானார்.  1918ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.


அக்டோபர் 4 : 1952

முதன் முதலில் பேஸ்மேக்கர் கருவி டாக்டர் பால்சோல் என்பவரால் பயன்படுத்தப்பட்டு டேவிட் ஹ்வார்ட்ஸ்  என்பவரின் இதயத் துடிப்பு சீராக்கப்பட்டது.

அக்டோபர் 4 : 1957

உலகின் முதல் செயற்கைக் கோள் ஸ்புட்னிக்-1 ரஷ்யாவால் ஏவப்பட்டது.

அக்டோபர் 4 : 1977

ஐ.நா சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வாஜ்பாய் முதன் முதலாக இந்தியில் பேசினார்.

அக்டோபர் 4 : 1991

தமிழகத்தில் மேல்சபை ஒழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 4 : 1998

திறனாய்வாளரும்  சொற்பொழிவாளருமான சாலை இளந்திரையன் மறைந்த நாள். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...