Skip to main content

அக்டோபர் 18

 அக்டோபர் 18 : 1799

பாரிசில் ஜென்சி ஜெனீவ் கார்னெரின் என்னும் பெண் முதன் முதலாக பலூனில் உயரே சென்று பாராசூட் மூலம் கீழே குதித்தார்.

அக்டோபர் 18 : 1842

நியூயார்க் துறைமுகத்தில் சாம்யூல் மோர்சினால் கடலடியில் தந்திக் கம்பிகள் முதன் முதலில் அமைக்கப்பட்டன.

அக்டோபர் 18 : 1851

பிரிட்டனில் முதன் முதலாக கடல் கடந்த நாடுகளுடன் தந்தித்; தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

அக்டோபர் 18 : 1928

முதன் முதலாக கலர் திரைப்படம் பிரிட்டனில் ராயல் போட்டோ கிராபிக் சொஸைட்டியில் திரையிட்டுக் காட்டப்பட்டது.

அக்டோபர் 18 : 1931

தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் காலமானார்.

அக்டோபர் 18 : 1955

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எமிலியோ செக்ரி என்பவரால் எதிர் புரோட்டான் (anti proton ) என்னும் அணு நுண்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.


அக்டோபர் 18 : 2004 

தமிழ்நாடு கர்நாடக இரண்டு மாநில காவல்துறைக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த தலைமறைவுக் கொள்ளையன் சந்தனக்கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்.

184  கொலைகள், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தன மரக்கடத்தல் , பல யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருடியது என பல குற்றங்களைச் செய்த போதும் அவனது புத்திக்கூர்மைக்காக காவல்துறை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியவன் வீரப்பன்.

 அவனைச் சுட்டுக் கொன்ற போது அதிரடிப் படையின் தலைவராக இருந்த விஜயகுமார் அவனைப் பற்றி  VEERAPPAN- CHASING THE BRIGAND என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...