Skip to main content

அக்டோபர் 10

அக்டோபர் 10 : 1801

தொண்டைமானின் படைகளுக்கும் ஊமைத்துரை, முத்து வெள்ளை நாயக்கர் படைகளுக்கும் திண்டுக்கல்லில் நடந்த மோதலில் தொண்டைமான் படை தோல்வியடைந்தது.

அக்டோபர் 10 : 1857

சிப்பாய்க் கலகம் என்று குறிப்பிடப்படும் முதல் விடுதலைப் போரில் கர்னல் எட்வர்ட் கிரேட் ஹெட்ழன் படை ஆக்ராவில் புரட்சியாளர் படையை முறியடித்தது.

அக்டோபர் 10 : 1896

ராஜஸ்தான்-ஜோத்பூரில்  வானியல் ஆய்வு மையம் துவங்கப்பட்டது.

அக்டோபர் 10: 1906

உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளரும்  இந்திய நாவல் ஆசிரியருமான  ஆர்.கே.நாராயணன் பிறந்த நாள். 

ஆர். கே. நாராயணன் என்பது ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன்  என்பதன் சுருக்கம்.

தன்னுடைய நாவல்களுக்காக இவர் உருவாக்கிய மால்குடி என்ற ஒரு கற்பனை  கிராமம்  உலகம் முழுவதும் புகழ்பெற்று ஒரு புது வரலாறு படைத்தது. 

அந்தப் பெருமை என்றும் நிலைத்திருக்கும் வகையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மால்குடி எக்ஸ்பிரஸ் என இந்திய ரயில்வே பெயர் வைத்துள்ளது. 

16024 MALGUDI EXPRESS, YELHANKA JN (YNK) To MYSURU JN (MYS)


பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லஷ்மண் இவரது தம்பியாவார்.

அக்டோபர் 10, 1908 

கொடுமுடி கே.பி.சுந்தராம்பாள்  பிறந்த நாள்.

தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் பெற்றவர். 

1937ல் காந்தி ஈரோடு பகுதியில்  சுற்றுப்பயணம் செய்த போது  கொடுமுடியில் உள்ள கே.பி.சுந்தராம்பாள் வீட்டில் உணவருந்தினார். அப்போது, காந்திக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பரிமாறினார் கே.பி.எஸ். சாப்பிட்ட பிறகு காந்தி கேட்டுக்கொண்டதால் விருந்து முடிந்ததும் அந்தத் தங்கத் தட்டையும் அவருக்கே கொடுத்துவிட்டார்.  காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்துவிட்டார்.

1953-ஆம் ஆண்டு வெளிவந்த அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு ரூ. 1 லட்சம் சம்பளமாகத் தந்தார். அப்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் 58 ரூபாய்.  அந்தக் காலத்தில் எந்த நடிகரும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத சம்பளம் இது.

1958ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 

1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் செப்டம்பர் 19 அன்று சுந்தராம்பாள் மறைந்தார். அந்தச்  சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.

“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கவும்  அரசு மரியாதையுடன்  தகனம் செய்யவும் அவர் உறவினர்கள் அனுமதிக்க வேண்டும்" என்று எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டார். அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர். அரசு மரியாதையும் வழங்கப்பட்டது.

சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடல்  இன்றும் காற்றில் கலந்து அவர் நினைவைச் சுமந்துவருகிறது.

அக்டோபர் 10 : 1969

மகாத்மா காந்தியும் அன்னை கஸ்தூரிபாயும் சேர்ந்தபடியான தபால்தலை வெளியிடப்பட்டது.  தம்பதியர் இடம் பெறும் முதல் தபால்தலை இதுவே.

அக்டோபர் 10 : 1972

எம்.ஜி.ராமச்சந்திரன் தி.மு.க விலிருந்து நீக்கப்பட்டார்.

அக்டோபர் 10 : 1977

தமிழறிஞர் மு. வரதராஜனார் காலமானார்.


அக்டோபர் 10 : 1991

இன்று  நாகப்பட்டினம் மாவட்டம்  புதிதாக உருவாக்கப்பட்டது.

அக்டோபர் 10 : 2015 

நகைச்சுவை  நடிகை  'ஆச்சி'  மனோரமா  மறைந்த நாள்.

1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததோடு  அண்ணாதுரை, கருணாநிதி,  எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா ஆகிய தமிழக முதலமைச்சர்களுடனும் ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமராவுடனும் நடித்த பெருமைக்குரியவர் இவர். 

அக்டோபர் 10 : 2022
 
தமிழக வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைந்த நாள். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...