Skip to main content

அக்டோபர் 14

 அக்டோபர் 14 : 1240

மொகலாயப் பேரரசின் ஒரே பெண் அரசியான ரஸியா சுல்தானா, அவளது கணவர் ஜலாலுத்தீன் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இல்டுமிஷின் மூன்றாவது மகன் முஸீத்தீன் பெக்ரம்  டில்லி சுல்தானாக முடிசூட்டிக் கொண்டான்.

அக்டோபர் 14 : 1612

பாரீசிலிருந்து வெளிவந்த ‘ஜெர்னல் ஜெனரல் டி அஃபிச்சஸ்’ என்னும் பத்திரிக்கையில் முதன் முதல் விளம்பரம் வந்தது.

அக்டோபர் 14 : 1884

அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்டமான் தான் கண்டுபிடித்த போட்டோ கிராபிக் பிலிமிற்குக் காப்புரிமை பெற்றார்.

அக்டோபர் 14 : 1920

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முதன் முறையாகப் பெண்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

அக்டோபர் 14 : 1942

எழுத்தாளர் சிவசங்கரி பிறந்த நாள்.

இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பலநிலைகளில் புகழ் பெற்றவர்.

சின்ன நுற்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?  என்ற இவரது படைப்பு புகழ் பெற்ற ஒன்று.

அக்டோபர் 14 : 1961

மேற்கு வங்கத்தில் சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரயில் எஞ்சின் ஓட ஆரம்பித்தது.  இதன் பெயர் ‘லோக மான்யா’.

அக்டோபர் 14 : 1969

இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா’ வைத் தயாரித்த கான்பகதூர் அர்டேஹர் இராணி காலமானார்.


அக்டோபர் 14 : 2005

சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான  சுந்தர ராமசாமி மறைந்த தினம். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் இவர்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...