Skip to main content

அக்டோபர் 15

 அக்டோபர் 15 : 1582

இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்சு முதலான நாடுகள் கிரிகோரியன் காலண்டர் முறையைப் பின்பற்ற ஆரம்பித்தன.  அக்டோபர் 5ம் தேதி 15 ஆம் தேதியாகக் கணக்கிடப்பட்டது.

அக்டோபர் 15 : 1798

ஜாக்ஸன் கட்டபொம்மனை நடத்திய விதம் பற்றி விசாரித்த லெப்டினல் கர்னல் பிரௌன் ஓர்ம், ஜான்காஸ் மேயர் ஆகியோர் அடங்கிய குழுவிடம் கட்டபொம்மன் ஆஜரானார்.

கட்டபொம்மனை தேவையில்லாமல்  ஜாக்ஸன் அவமானப்படுத்தினார் என இக்குழு கண்டித்தது.  

இராமநாதபுரம் அரண்மனையில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி கிளாக்கின் ஊதியத்திற்கு ஈடாக கட்டபொம்மன் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் இக்குழு அறிவித்தது.

அக்டோபர் 15 : 1840

இன்றைய மாநிலக் கல்லூரியின் முன்னோடியான ‘எடின்பார்க் ஹொம்' எழும்பூரில் இன்று வாடகைக் கட்டடத்தில் துவக்கப்பட்டது.

அக்டோபர் 15 : 1854

இந்தியாவில் முதன் முறையாக நாலணா போஸ்டேஜ் ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.  

கல்கத்தாவில் அச்சடிக்கப்பட்ட இந்த ஸ்டாம்ப் தான் ஆசியாவின் முதல் இருவண்ண ஸ்டாம்ப்.

அக்டோபர் 15 : 1855

ஓரங்களில் துளையிடப்பட்ட ஸ்டாம்ப் முதன் முறையாக வெளியிடப்பட்டது.


அக்டோபர் 15 : 1924 

திரைப்பட உலகின்  பழம்பெரும்  இயக்குநர் ஏ. பீம்சிங் பிறந்த தினம். 


நுட்பமான குடும்ப உறவுகள் பற்றிப் பேசும் பல படங்களை இயக்கியவர். இவர் படம் ஒவ்வொன்றும் உறவுகளின் மேன்மையைச் சொல்லும்.    

'ப' வரிசை வெற்றிப் படங்கள் என்றாலே பீம்சிங் என்று சொல்லும் வகையில் 'ப' சென்டிமெண்ட் கொண்டவர்.  

பாசமலர், பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாவ மன்னிப்பு, பாலும் பழமும், படித்தால் மட்டும் போதுமா  என்று இவர் தந்த படங்கள் காலத்தை விஞ்சி நிற்பவை. 

16 ஜனவரி 1978 இவர் மறைந்த தினம். 

அக்டோபர் 15 : 1931

இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் அப்துல் காலம் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

அக்டோபர் 15 : 1932

இந்தியாவின் முதல் விமானப் போக்குவரத்து நிறுவனமான ‘டாட்டா சன்ஸ் லிமிடெட்’ துவங்கப்பட்டது.  

டாட்டாவே விமானத்தை கராச்சியிலிருந்து பம்பாய்க்கு ஓட்டி வந்தார்.

அக்டோபர் 15 : 1934

புல்லாங்குழல் இசையில் உலகப் புகழ் பெற்ற என். ரமணி பிறந்த தினம். 

அக்டோபர் 15 : 1949

மணிப்பூர் இந்தியாவுடன் இணைந்தது.

அக்டோபர் 15 : 1949

பிரணாய் ராய் பிறந்த தினம்.

தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் இவர் வழங்கிய வேர்ல்ட் திஸ் வீக்(World this week)  ஒரு புகழ் பெற்ற நிகழ்ச்சி. 

தேர்தல் நேரங்களில் இவர் வழங்கும் தேர்தல் கணிப்புகளும் தேர்தல் நேரலை செய்திகளும் உலகப் புகழ்பெற்றவை.

என்டிடிவி  தொலைக்காட்சி இவர் தொடங்கியது தான். 

அக்டோபர் 15 : 1961

லண்டனில் மனித உரிமை அமைப்பான ‘ஆம்னெஸ்டே இண்டர்நேஷனல்’ இன்று பீட்டர் பெனென்கன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

அக்டோபர் 15 : 1988

உஜ்வாலா பட்டில் என்னும் பெண் ஜெகஸ் என்னும் படகில் உலகைச் சுற்றி வந்தார்.  படகில் உலகைச் சுற்றிய முதல் ஆசியப் பெண்மணி இவர்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...