Skip to main content

அக்டோபர் 16


அக்டோபர் 16 : 1700

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் பிறந்த நாள்.

அலைபாயுதே... கண்ணா, 

என் மனம் அலைபாயுதே

உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்

அலைபாயுதே... கண்ணா...

என்ற அமரத்துவம் வாய்ந்த பாடல் வரிகளை எழுதியவர் இவர் தான். 

அக்டோபர் 16 : 1799

வீரபாண்டிய கட்டபொம்மன் ‘கயத்தாறு’ என்னுமிடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.

அக்டோபர் 16 : 1846

பாஸ்டனில் மாஸா சூஸட் பொது மருத்துவமனையில் டாக்டர் காலின் வாரன் என்பவர் மயக்க மருந்து கொடுத்து ஒரு இளைஞனின் தாடையிலுள்ள கட்டியை அகற்றினார்.  

மயக்க மருந்து கொடுத்துச் செய்யப்பட்ட முதல் அறுவைச் சிகிச்சை இது.

அக்டோபர் 16 : 1881

தமிழறிஞர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பிறந்த நாள்.

அக்டோபர் 16 : 1900

ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி பிறந்த நாள்.

இவர் தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரின் இல்லத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களைச் சேகரித்து வைக்கும் வழக்கம் இருந்தது. அதன் வழியே வாசிக்கும் பழக்கம் குடும்பம் முழுமைக்கும் அமைந்திருந்தது.

கதை, கட்டுரை என்ற எந்தப் படைப்புக்குள்ளும் போகாமல்  ஆராய்ச்சிக்கு மட்டுமே தன்னுடைய சிந்தனையையும் நேரத்தையும் பயன்படுத்திக்கொண்டவர் இவர்.

அக்டோபர் 16 : 1906

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளையால் பங்கு ஒன்று பத்து ரூபாய் வீதம் பத்து லட்சம் மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ‘சுதேசி கப்பல் கம்பெனி’ பதிவு செய்யப்பட்டது.

அக்டோபர் 16 : 1923

உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் பிறந்த நாள். 

ஏறக்குறைய எல்லா சங்க இலக்கிய நூல்களுக்கும் இவர் உரை எழுதியுள்ளார். இவர் உரை மேம்போக்காகவும் எளிமையான நடையிலும் அமைந்திருக்கும்.  

17 ஏப்ரல் 1992 இவர் மறைந்த நாள்.

அக்டோபர் 16 : 1944

எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் வெளியானது.  சென்னை பிராட்வே திரையரங்கில் 16.10.1944 முதல் 12.11.1946 வரை 768 நாட்கள் ஓடிய இந்தப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்டது.


அக்டோபர் 16 : 1948

நடிகையும் மதுரா  தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி பிறந்த தினம். 


அக்டோபர் 16 : 1952

கிரேசி மோகன் பிறந்த நாள்.

கிரேசி மோகன் ஒரு தொழில் முறை என்ஜினீயர் . இருந்த போதும் மேடை நாடகங்களில் புகழ் பெற்றவர். இவரது  எல்லா நாடகங்களிலும் இவரது சகோதரர் மாது பாலாஜி இருப்பர். 

கமல்ஹாசன் இவரை தன்னுடைய படங்களுக்கு கதை வசனம் எழுதச் சொன்னதன் மூலம் திரைப்பட வசனகர்த்தா ஆனார். அபூர்வ சகோதரர்கள் , மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இவர் கதை-வசனம் எழுதியுள்ளார்.  அப்படங்கள் வெற்றி பெற இவரது  நகைச்சுவை வசங்கள் முக்கியக் காரணம்.

10 -6-2019 இவர் மறைந்த நாள்.

அக்டோபர் 16 : 1985

‘தர்மச் சக்கரம்’ மாத இதழின் ஆசிரியரும் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் அமைத்தவருமான சுவாமி சித்பவானந்தர் காலமானார்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...