Skip to main content

அக்டோபர் 13

 அக்டோபர் 13 : 1792

அமெரிக்காவில் வாஷிங்டனில் வெள்ளைமாளிகை கட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அடிக்கல் நாட்டினார்.

அக்டோபர் 13 : 1884

கிரீன்விச் மீன் டைம் உலகம் முழுவதும் பொதுவான நேரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அக்டோபர் 13 : 1904

சிக்மண்ட் ப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்னும் நூல் வெளியானது.

அக்டோபர் 13 : 1908

திருநெல்வேலி செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த கொடுமையான தண்டனையை எதிர்த்து வ.உ.சிதம்பரம் பிள்ளையும். சுப்பிரமணிய சிவாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அக்டோபர் 13 : 1911

சகோதரி நிவேதிதா காலமானார்.

அக்டோபர் 13 : 1936

வீணை இசை வித்துவான்  சிட்டிபாபு பிறந்த தினம்.

அக்டோபர் 13: 1956

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட தன் வாழ்க்கையைத் தந்த சங்கரலிங்கனார் மறைந்த நாள்.

1.சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், 

2.அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும்,  

3.மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.   

போன்ற கோரிக்கைகளுடன், 27.7.1956-இல் அவர்  உண்ணாவிரதத்தைத் துவக்கினார். 

அப்போதிருந்த காங்கிரஸ் அரசு அவருடைய இந்தக் கோரிக்கைகளை ஏற்கவில்லை.  ஆனாலும் விடாமல் போராடி  76 நாட்கள்  தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.

இன்று அவர் உயிர் நீத்த நாள்.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...