Skip to main content

அக்டோபர் 5

 அக்டோபர் 5 : 1535

ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட முதல் பைபிள் இங்கிலாந்தில் வெளியானது.

அக்டோபர் 5 : 1823

இராமலிங்க வள்ளலார் பிறந்த நாள்.

அக்டோபர் 5 : 1864

வங்காள விரிகுடாவில் உருவான கடும்புயல் கல்கத்தா நகரைத் தாக்கியது.  கடல்நீர் 30 அடி உயரம் எழுந்ததால் 50,000 பேர் இறந்தனர்.  200க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூழ்கின.

அக்டோபர் 5 : 1914

விமானப் போரில் பிரெஞ்ச் விமானம் ஜெர்மனி விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.  விமானச் சண்டையில் வீழ்த்தப்பட்ட முதல் விமானம் இது.

அக்டோபர் 5 : 1927 

ரா. கி. ரங்கராஜன் பிறந்த நாள். 

குமுதம் இதழின்  ஆசிரியர் குழுவுடனும் ஆசிரியராகவும் நாற்பது ஆண்டுகள் பணியாற்றியவர். 

பல வரலாற்றுப் புதினங்கள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.  ஆகஸ்ட் 18, 2012 இவர் மறைந்த நாள். 

அக்டோபர் 5 : 1934 

சோ என்ற பெயரில் புகழ் பெற்றவரான சோ.ராமசாமி பிறந்த நாள்.   

துக்ளக் இதழின் நிறுவனர்  மற்றும் ஆசிரியர்.  பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் எனப் பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துகள் புகழ் பெற்றவை. நகைச்சுவை நடிகராகவும் விளங்கியவர். 

அக்டோபர் 5 : 1951

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் இன்று தொடங்கியது.

அக்டோபர் 5 : 1982

ஜப்பானில் சோனி நிறுவனம் 5 செ.மீ திரை கொண்ட பாக்கெட் டெலிவிஷனை  விற்பனைக்குக் கொண்டு வந்தது.

அக்டோபர் 5 : 1989

ஃபாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...