Skip to main content

என் மகள் விளையாடிய பொம்மை

 

வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் பெற்றோர்க்கு பிள்ளைகளைப் ற்றி  ஒரு பிணைப்பை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அந்தப் பொருள் எந்த நாளில் அல்லது எந்த விழாவில் வாங்கப்பட்டது என்பதற்கு ஒரு இனிய கதை மனதிற்குள் ருக்கும்.

 வாங்கித் தந்த ஒரு பொருள் பழையதான பின்னும் அதை அப்புறப்படுத்தாமல் பத்திரமாக வைத்திருப்பதற்குக் காரணம் பொருள்களோடு பிணைந்துள்ள அந்த அழகிய நினைவுகளை இழக்க விரும்பாததே. அந்த நினைவுகள் தரும் சுகம் ஈடுஇணை இல்லாதது. குழந்தைகள் வீட்டில் இல்லாத நாட்கள் அந்தப் பொருட்களோடு ஒரு நெருக்கத்தைத் தரும்.

    அவர்கள் இருந்த அறை , அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்கள் இப்படி எல்லாம் அவர்களை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்.

"இது அவன்  குழந்தையாக  இருந்தப்ப ஓட்டிக் கொண்டிருந்த சைக்கிள்"

" இது அவ ஆசை ஆசையா வாங்கின உண்டியல்"
 
இப்படி வீட்டில் ஒவ்வொன்றும் பிள்ளைகளை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். 


இந்த உணர்ச்சிகளை சங்கப்பாடலான  ஐங்குறுநூறில், ஓதலாந்தையார்  படம் பிடித்துக் காட்டுகிறார். 

 
மகள், திருமணம் ஆகி, கணவனோடு சென்று விட்டாள்.  இங்கே வீட்டில் தாயின் மனம் நினைத்துப்பார்க்கிறது. 


"இது என் மகள் வைத்து விளையாடிய பொம்மை. இது என் மகள் கொஞ்சிய கிளி. இப்படி எதைப் பார்த்தாலும் அவள் ஞாபகமே வருகிறது. எப்படித்தான் என்னை விட்டுச் சென்றாளோ "

பாடல்

இது என் பாவை பாவை, இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண் தொறும் காண் தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங்கணோளே.

(ஐங்குறுநூறு)

பொருள்

இது என் பாவை பாவை - இது என் மகள் விளையாடிய பொம்மை

இது என் - இது என்


அலமரு நோக்கின் -அலை பாயும் கண்களை உடைய

நலம்வரு சுடர் நுதல் -நல்ல சுடர் விடும் நெற்றியைக் கொண்ட

பைங்கிளி எடுத்த பைங்கிளி - கிளி போன்ற என் மகள்  விளையாடிய பச்சைக் கிளி


என்றிவை - என்று இவை

காண் தொறும்  காண் தொறும்  - பார்க்கப் பார்க்க


கலங்க - என் மனம் கலங்க


நீங்கினளோ - என்னை விட்டுச் சென்று விட்டாள்


என் பூங்கணோளே. - பூ போன்ற அழகிய கண்களை உடைய என் மகள்


ண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்.

ஆனாலும், அந்த உணர்ச்சி இன்றும் அப்படியே இருக்கிறது. 




Comments

  1. ஆம்..
    நிதர்சன உண்மை... திருமணத்திற்கு பின்
    மகளைப் பிரிந்த
    " தாய் "
    தன் மகள் விளையாடிய
    அந்த பூங்கொத்து
    பொம்மையைப் பார்த்து
    எழுதிய கவிதை
    இதோ.....
    " மலர் எங்கோ
    மணம் வீசிக்
    கொண்டிருந்தாலும்
    மனம் மட்டும்
    நறுமணத்தின்
    நிறைவாய்..!!! .
    அந்த தாய்க்கு வாழ்த்துக்கள்.!

    ReplyDelete

Post a Comment

Your feedback

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...