Skip to main content

பிள்ளை வளர்க்கும் தமிழ்

 


    96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று பிள்ளைத்தமிழ். பாடுவதற்கு தேர்ந்தெடுத்துக் கொண்ட தெய்வத்தையோ அரசனையோ வள்ளலையோ  மக்களில் சிறந்தவர்களையோ குழந்தையாக நினைத்து பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.


 குழந்தையின் வயது 3 மாதம் முதல் 21 மாதங்கள் வரை   பத்துப் பருவங்களாகப் பிரித்துக் கொண்டு இது  பாடப்படும்.


1 ஆம் பருவம் -காப்புப் பருவம்


இது குழந்தைக்கு வயது 2 மாதம்  இருக்கும் போது பாடப்படும். தன்னுடைய இஷ்ட தெய்வங்களை எல்லாம் இந்தக்குழந்தையை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வது காப்புப் பருவம்.


2 ஆம் பருவம் -செங்கீரைப் பருவம்


குழந்தைக்கு 5 மாதம் ஆகும்போது பாடப்படுவது செங்கீரைப் பருவம்.

சிறிய சொற்களை ஒலிக் குறிப்பால் குழந்தை சொல்ல முடியும் போது ஆடிக்கொண்டே அந்தச் சொற்களைச் சொல்லும் வயது இது.


 3 ஆம் பருவம்- தாலப்பருவம் 


தால் என்றால் நாக்கு. குழந்தையைத் தூங்க வைக்க தாயார் பாடும் தாலாட்டுப் பாடலை  குழந்தை கேட்கின்ற பருவம் தாலப்பருவம். 

இந்தப் பருவத்தில் குழந்தையினுடைய வயது ஏழு மாதமாக இருக்கும்.


4 ஆம் பருவம்- சப்பாணிப் பருவம்


இரண்டு கைகளையும் சேர்த்து தட்டும் போது உண்டாகின்ற ஒலி சப். பாணி என்றால் கை என்று பொருள். இந்தப் பருவத்தில் குழந்தைக்கு 9 மாதம் ஆகியிருக்கும்.


சப்பாணி  சப்பாணி தட்டுவானாம் தயிருஞ் சோறு உண்பானாம்...


என்று பாடுவதைக் கேள்விப்பட்டிருப்போம்.


5 ஆம் பருவம்- முத்தப் பருவம்


 மொத்தமுள்ள பத்துப் பருவங்களில் சிறந்த பருவமாக இது கருதப்படுகிறது. குழந்தையை முத்தம் தருமாறு தாயும் தந்தையும் வேண்டும் பருவம் இது.  இது குழந்தையின் பதினோராவது மாதத்தில் நடைபெறும் பருவம்.


6 ஆம் பருவம்- வாரானைப் பருவம்


தத்தித்தத்தி தளிர் நடை இட்டு வருகின்ற குழந்தையை   அதனுடைய இயல்புகளை எல்லாம் சொல்லி  அருகில் வருமாறு அழைக்கின்ற பருவம் இது. இந்தப் பருவத்தின் போது குழந்தைக்கு 13 மாதம் நடந்து கொண்டிருக்கும் .


7 ஆம் பருவம்- அம்புலிப் பருவம்


குழந்தைக்கு நிலாவை காட்டி குழந்தையோடு வருமாறு விளையாட வருமாறு நிலாவை அழைக்கின்ற பருவம் அம்புலிப் பருவம் . இந்தப் பருவத்தில் குழந்தை பதினைந்தாம் மாதத்தில் இருக்கும்.


8 ஆம் பருவம்- சிற்றில் பருவம்


பிள்ளைத்தமிழில் மற்ற பருவங்கள் எல்லாம் பெற்றோரும் மற்றோரும் பாடுவது.  குழந்தை பாடுமாறு அமைவது சிற்றில் பருவம். இந்தப் பருவத்தில் குழந்தை  பதினேழாம்  மாதத்தில் இருக்கும்.




ஒரு பெண் குழந்தை தான் விளையாட சிறிய வீட்டை மணல் வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறது. அக்குழந்தையின் அண்ணன் அவனோடு விளையாட வருமாறு தன் தங்கையை அழைக்கிறான். தங்கை செல்லவில்லை.  விளையாட வராத கோபத்தில் தங்கை கட்டிய மணல் வீட்டைக் கலைத்துவிட முற்படுகிறான் அண்ணன்.  அப்போது வீட்டைச்  சிதைக்காதே என்ற பொருளில் தங்கை பாடுவது இந்தப் பருவம்.



9ஆம் பருவம்-சிறுபறைப் பருவம்


குழந்தையிடம் சத்தம் எழுப்புகின்ற சிறிய பறை முதலிய கருவிகளைக் கொடுத்து சத்தமிடும் போது  கேட்டு மகிழ்வதாக பெற்றோர் பாடுவது சிறுபறைப் பருவம்.


  குழந்தையின் பத்தொன்பதாவது மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.


10 ஆம் பருவம்- சிறுதேர்ப் பருவம்


   மரத்தாலான சிறிய தேரினை உருட்டி விளையாடுகின்ற பருவம் இது.  இப்போது தேருக்குப் பதிலாக பொம்மை  காரை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 


 இது குழந்தையின் இருபத்தி ஒன்றாம் மாதத்தில் நிகழும் நிகழ்ச்சியாகும்.










Comments

  1. இதனால்
    தான்
    என்னவோ???!!!

    ""தமிழும்".

    நாளொரு மேனி
    பொழுதொரு
    வண்ணமாய்
    வளர்ந்து
    கொண்டே
    வருகிறதோ..!!

    ReplyDelete
  2. சிற்றில் பருவத்தில் மாதம் குறிப்பிடப்படவில்லை.எந்த மாதத்தில் பாடப்படுவது என்று குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  3. சிற்றில் பருவத்தில் குழந்தையின் வயது குறிப்பிடப்படாததைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது

    ReplyDelete

Post a Comment

Your feedback

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...