Skip to main content

கூட்டு வாசிப்பு

             

       முன்பெல்லாம் ஒருவர் மட்டும் படித்திருந்து, கூட இருக்கும் இரண்டு மூன்று பேர்  படிக்கத் தெரியாதவராக இருந்தால் படிக்கத்  தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாட்டுப் புத்தகத்தையோ செய்தித்தாளையோ உரக்கப் படிப்பது வழக்கம். 

        இப்படி உரக்கப் படிக்கும்போது  கேட்போர் தங்களுடைய அனுபவங்களையும் தாங்கள் வைத்திருக்கின்ற கதைகளையும் இடையிடையே கூறிப் புளகாங்கிதமடைந்து  ஒரு கலந்துரையாடல் போலச் செய்து கொண்டு வருவார்கள். 

                தெருக்கூத்து நிகழ்ச்சிகள் போல கூட்டு வாசிப்பு என்பது அடித்தள மக்களுக்கு விஷயங்களைத்  தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருந்தது.  

        கூட்டு வாசிப்பு நிகழ்வு ஒன்றை புதுமைப்பித்தன் 'நாசகார கும்பலில்' பின்வருமாறு சித்தரிக்கிறார்.

        நேரம் நல்ல உச்சிவெயில்...  

        பலசரக்கு கடைச்  சுப்புப்பிள்ளை பட்டறையில்  உட்கார்ந்து சுடலை மாடன் வில்லுப்பாட்டு புத்தகம் ஒன்றை ரஸமாக உரக்கப் பாடி, கடை  சாய்ப்பின் கீழ் துண்டை விரித்து முழங்காலைக் கட்டி உட்கார்ந்திருக்கும் இரண்டொரு தேவமாரை (மறவர்) மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.  

        தம்பலத்தால் வாயில் எச்சில் ஊற்று நிறைய நிறைய, வாசிப்புக்கு இடையூறு ஏற்படாத படியும் கீழே உட்கார்ந்து இருப்பவர் மீது சிறிதும் தெறிக்காத படியும் லாவகமாக தலையை வெளியே நீட்டி அவர் துப்பும் போது கடையின் பக்கத்துச் சுவரில் துப்பாமல் இருப்பதற்கு நீண்ட நாள் அனுபவம் மட்டும் போதாது அதற்கு தனித் திறமையும் வேண்டும் என்பது தெரியும்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...