Skip to main content

Posts

Showing posts from January, 2022

தவுதாயம்

  பெரும் வருத்தத்தில் இருப்பவர்களை பெரியவர்கள் "தவுதாயப்படாதே நாங்கெல்லாம் இருக்கோம்ல" என்று ஆறுதல் சொல்வது வழக்கம். தவுதாயம் என்பது தபுதாரம் என்ற சொல்லின் பேச்சு வழக்கு. தாரமிழந்த நிலையை தொல்காப்பியம் தபுதார நிலை எனக் கூறுகிறது. மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்துகொள்ளாமல் வருத்தத்தோடு தனியே வாழும் நிலையே தபுதார நிலை என்று புறப்பொருள் வெண்பா மாலை விளக்கமாக விவரிக்கிறது. அவள் பச்சை நிறத்தில் வளையல் அணிந்துகொண்டிருப்பாள். அவள் கணவனோ வலிமை வாய்ந்தவன். எல்லோருக்கும் மேகம் போல வாரிக்கொடுக்கும் வள்ளல் அவன்.  எனக்கு அவன் தந்தை போன்றவன். இன்று அவள் இறந்துவிட்டாள்.  அவன் தனிமைத் துயரில் ஆழ்ந்த செய்தியைக் கேட்காமல் இருக்க என் காதுகள் செவிடாகப்போகட்டும் என ஒருவன் பாடுகிறான்.   பைந்தொடி மேலுலகம் எய்தப் படருழந்த  மைந்தன் குரிசில் மழைவள்ளல்-எந்தை  தபுதாரத் தாழ்ந்த தனிநிலைமை கேளாச்  செவிடாய் ஒழிகென் செவி.  தபு - இறத்தல் தாரம்- மனைவி மனைவி இறந்தபின் அவன் மறுமணம் செய்ய எண்ணவில்லை என்பதால் தான் "தபுதாரத் தாழ்ந்த தனிநிலைமை" எனக் கூறுகிறான்.

நலம் வாழ நான் பாடினேன்

  சிலப்பதிகாரம் என்ற பெருங்காப்பியத்தை நிறைவு செய்யும்போது அதுவரை படித்த ஒவ்வொருவருக்கும் அடிகளார் கூறும் அறவுரை இது. அரசவாழ்வைத் துறந்து அறவாழ்வை மேற்கொண்டவர் இளங்கோவடிகள் என்பதையும் நினைவில் கொண்டால் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் உள்ள சத்தியத்தை ஓரளவு நம்மால் உணரமுடியும்.   நான் பாடக் கேட்ட நலம் சான்ற பெருந்தகையோரே!    கவலையிலிருந்தும், துன்பத்திலிருந்தும் பாங்காக விடுபடுங்கள்.  தெய்வம் இன்னதெனத் தெளிவு பெறுங்கள்.  இத்தகைய தெளிவு பெற்றவர்களைப் போற்றிக்கொண்டு வாழுங்கள்.  பொய் சொல்வதற்கு அஞ்சுங்கள்.  பிறர்மேல் பழி சுமத்தாதீர்கள்.  புலால் உண்ணாதீர்கள்.  உயிரைக் கொலை செய்யும் தொழிலை விட்டுவிடுங்கள்.  தானம் செய்யுங்கள்.  தவ நெறியை மேற்கொள்ளுங்கள்.  பிறர்  செய்த உதவியை அழித்துவிடாதீர்கள்.  தீயவரோடு நட்புக் கொள்வதை இகழ்ச்சியாக எண்ணுங்கள்.  பொய் சாட்சி சொல்லாதீர்கள்.  உண்மை கூறும் வாழ்கையை விட்டு நீங்காதீர்கள்.  அறநெறியாளர் அவையை விட்டு நீங்காமல் இருங்கள்.  பிறன் மனைவ...

Negative / Affirmative Sentence

 Negative / Affirmative Sentence A) Using opposite words-  1) This is not good. This is bad. 2) The prince is cruel.  The prince is not kind. B) Using fail to, fails to, failed to / do not, does not, did not 1) Ram does not understand her. Ram fails to  understand her. 2) She did not kill the cat. She failed to kill a cat. 3) I do not come. I fail to come. C) Using as well as, not only – - - - but also – 1) They are not only clever but also rich. They are clever as well as rich. 2) He was strong as well as kind. He was not only strong but also kind. D) Using too - - -to / so - - -that – 1) She is too tired to walk. She is so tired that she cannot walk. 2) They are so lazy that I cannot help them. They are too lazy for me to help them. E) Using unless / If - - - not 1) If you work hard, you will win. Unless you work hard, you will not win. 2) Unless he runs fast, he will remain behind in the race. If he does not run fast, he will remain behind in the race. F) Changing...

இது கொஞ்சம் ஓவர்

  அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள் அதனால் நல்லபறை ஒலிக்கவில்லை அவளுக்காக…   ஏனெனில் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டாள் அனிச்ச மலர்களை…   அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. ( திருக்குறள்)

பள்ளிக்கே செல்லாத விஞ்ஞானி- Andre-marie Ampere

மின்சாரத்தைப் பற்றிப் பேசும்போது ஆம்பியர் (Ampere) என்ற சொல்  கூடவே வரும். பிரான்ஸ் நாட்டின் இயற்பியலாளரும், மின்காந்தவியல் (Electrodynamics)பிரிவைக் கண்டறிந்தவர்களில் ஒருவருமான ஆந்த்ரே-மரி ஆம்பியர் (Andre-Marie Ampere) பிறந்த தினம் 1775 ஜனவரி 20.  பிரான்சின் லியோன் என்ற பகுதியில் பிறந்தார் (1775). தந்தை, வெற்றிகரமான வியாபாரி. தன் மகனுக்கு லத்தீன் கற்றுத் தந்தார். மிகவும் அறிவுக் கூர்மைமிக்க இந்தச் சிறுவனுக்குள் கட்டுக்கடங்காத அறிவு தாகம் ஊற்றெடுத்தது.  ஒரு கலைக்களஞ்சியத்தின் ஒட்டுமொத்த பக்கங்களையும் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்தான், 13-வது வயதில் கணிதத்தில் அளவு கடந்த ஆர்வம் பிறந்தது.  பிரபல கணிதவியல் அறிஞர்கள் லத்தீன் மொழியில் எழுதிய நூல்களைப் படிக்க ஏதுவாக லத்தீன் கல்வியையே தொடர்ந்தார்.  அப்போதே ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி, ஒரு கணித அகாடமிக்கு அனுப்பினார். அது ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் மேலும் தீவிரமாகக் கணிதம் கற்றார்.  சிறந்த கணித ஆசிரியரிடமும் அனுப்பிவைத்து, மகனின் கணித ஞானத்தைப் பட்டை தீட்டினார் தந்தை. கணித நூல்களைத் தவிர இயற்பியல...

மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும்?

  பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போது ... பெண்ணின் தந்தை  படித்த மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று விரும்புவான்.  பெண்ணின் தாய் மாப்பிள்ளைக்கு நிறைய சொத்தும் காசு பணமும்  இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.  இவர்களுக்கு இடையில் பெண்ணின் சொந்தக்காரர்களோ  மாப்பிள்ளை தம்முடைய  குலத்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்.  ஆனால், மணப் பெண்ணோ தன் கணவன் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.  பெண் ணுதவும் காலைப் பிதா விரும்பும் வித்தையே எண்ணில் தனம்விரும்பும் ஈன்ற தாய் - நண்ணிடையில்  கூரியநல் சுற்றம் குலம்விரும்பும் காந்தனது  பேரழகு தான் விரும்பும் பெண்   (நீதி வெண்பா)

முதல் குடியரசு தினம்

ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் ஹாலில், 1950 ஜன., 26ம் தேதி காலை 10:18 மணிக்கு இந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.  அடுத்த 6நிமிடங்களுக்குப்பின், நாட்டின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதவியேற்றார்.  இவ்விழாவின் போது, சுதந்திர இந்தியாவின்  கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, குடியரசு மற்றும் அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை வாசித்தார். பின் 10:30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க, நாடு குடியரசு அடைந்ததை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்;  தேசியக்கொடியையும் பறக்கவிட்டார்.  பின் ஜனாதிபதி குடியரசு தின உரை நிகழ்த்தினார்.  முதலில் இந்தியிலும், பின் ஆங்கிலத்திலும் பேசினார். பின் மதியம் 2:30 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இருந்து திறந்த வாகனத்தில்  இர்வின் மைதானத்துக்கு சென்றார்.  வழி நெடுக தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.  மக்கள் 'ஜெய்ஹிந்த்' எனக் கோஷமிட்டனர்.  பின் இர்வின் மைதானத்தில் நடந்த அணிவகுப்பில் முப்படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.  இவ்விழாவில் 3,000 அதிகாரிகள், 15 ஆயிரத்து...

யானைக்கும் வெட்கம்

   அரண்மனைக்குள் செல்லாமல் கதவோரம் நின்று கொண்டிருக்கிறது அந்த யானை. உள்ளே செல்ல அதற்கு வெட்கம். போரில் சண்டை போடும் போது பகை மன்னனின் கோட்டை மதில் சுவரை மோதித் தகர்த்து அதன் தந்தங்கள் முறிந்திருக்கின்றன. பலரைக் காலால் இடறி, அதன் கால் நகங்கள் தேய்ந்து போயிருக்கின்றன.  இந்தக் கோலத்தில் அரண்மனைக்குள் போனால் தன் பெண்யானை தன்னைப் பார்த்துச் சிரிக்குமே என்று வெட்கப்பட்டுக் கொண்டு உள்ளே செல்லாமல் கதவோரம் நின்று கொண்டிருக்கிறது. கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர் முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல்லார்தோட் கிள்ளி களிறு. (முத்தொள்ளாயிரம்) போரில்  வீரம் வென்ற பிறகு வெட்கம் இது சோழ மன்னனின் அரண்மனை யானை.

பார்த்தால் மறந்துபோகிறதே!

 அவர் காலையில் வேலைக்குப் புறப்பட்டுப் போனவுடன் அவரது குற்றம்குறைகள் எல்லாம் வரிசையாக நினைவுக்கு வருகின்றன.  ஆனால் அவர் வீட்டுக்கு வந்தவுடன் எல்லாமே மறந்து போய்விடுகின்றன.  இந்த நோய்க்கு எந்த மருத்துவம் பார்க்க நான்? பேணும் கொழுநர் பிழைகள் எலாம் பிரிந்த பொழுது நினைந்தவரைக் காணும் பொழுது மறந்திருப்பீர் கனபொற் கபாடம் திறமினோ”  (கலிங்கத்துப் பரணி 65) திருக்குறள் இடம் கூட அதைத்தான் சொல்கிறது.  இந்தப் பெண்ணுக்கும் அதே உணர்வு தான். கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாத போதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன். காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. (திருக்குறள்)  அதனால் தான்   நிறைய ஆண்களின் தலை தப்பித்துக்கொண்டிருக்கிறதோ?

Gerund /Infinitive

  Gerund / Infinitive 1) She began laughing, She began to laugh. 2) He preferred talking.  He preferred to talk.              3) Resting is rusting. To rest is to rust. 4) A produce invests money in building up a reputation.  A producer invests money to build up a reputation. 5) Courage is sticking to your post in danger. Courage is to stick to your post in danger. 6) I hate waiting at the crowded railway station. I hate to wait at the crowded railway station. 7)  Food is the most essential factor in building and maintaining health. Food is the most essential factor to build and maintain health. 8) He dislikes deceiving people. He dislikes to deceive people. 9) No one has yet invented a suitable way of using its rays. No one has yet invented a suitable way to use its rays.  Infinitive/gerund 1) To die is better than to beg.  Dying is better than begging. 2) But he refused to do so. But he ...

இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சிகளின் தந்தை

  சாஞ்சி ஸ்தூபி...  , சாரநாத் தூண்...  பள்ளிப் பாடத்தில் படித்தது அவ்வப்போது  நினைவுக்கு வரலாம். இந்தியாவின் மரபு சார்ந்த பெருமைகளைக் கூறும்  தொல்லியல் அடையாளங்களுள் முக்கியமான சாஞ்சி ஸ்தூபி சாரநாத் தூண் ஆகியவற்றை அகழ்வாய்வில் கண்டுபிடித்த  தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இந்திய தொல்லியல் ஆய்வுகளின் தந்தை ’ எனப் போற்றப்படும் பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (Alexander Cunningham). இவர் பிறந்த தினம் 1814 ஜனவரி 23. லண்டனில் பிறந்தார். இவரது தந்தை ஒரு கவிஞர்.  ராயல் இன்ஜினீயர்ஸ் எஸ்டேட் கல்விக்கூடத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்று, 19 வயதில் இந்திய - பிரிட்டிஷ் ராணுவத்தில் ‘பெங்கால் இன்ஜினீயர்ஸ்’ பிரிவில் 2-ம் நிலை லெப்டினென்டாக சேர்ந்தார்.  28 ஆண்டு ராணுவப் பணியில், பல உயர் பதவிகளை வகித்தார். மேஜர் ஜெனரல் ஆனபிறகு, ஓய்வு பெற்றார். இந்தியாவுக்கு 1833-ல் வந்தபோது, ஜேம்ஸ் பிரின்செப் என்ற அகழ்வாராய்ச்சி நிபுணரின் நட்பு கிடைத்தது. பல்வேறு இடங்களுக்குச் சென்று அந்தந்த இடங்களின் வரலாறு குறித்து அறிந்தார். அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபட்டார்.  குவா...

எலி வேட்டை(நகைச்சுவைக் கட்டுரை)

            அப்போது நாங்கள் கிராமத்தில் இருந்தோம். மிகப்பெரிய பழைய வீடு. பெரும்பாலும் பகலில்கூட, கீழே படுத்திருப்பவரை மிதித்துக் கொண்டு போகும்படியான வெளிச்சம் உள்ள வீடு.                அருகிலுள்ள சாக்கடையின் நறுமணம் தென்றலோடு கலந்து நாசியில் வீசும். இரவு நேரங்களில் திடீர், திடீர் என்று மின்சாரம் காணாமல் போகும். மழை வந்தால் நனையாமல் இருக்க வெளியேதான் வரவேண்டும். இந்த வீட்டில் அதிகமாக இருந்தவை எலிகள் மற்றும் அவற்றின் வகைகள்.                நீங்கள் நினைப்பது போல் எலி என்றால் எல்லாம் எலி ஆகிவிடுமா? சாதாரண எலி, சுண்டெலி, பெருச்சாளி, மூஞ்சுறு எனப் பல்வேறு பட்ட சாதிகள் இவற்றில் உள்ளன. இதில் பெருச்சாளிகள் சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்தவை. எல்லா எலிகளுக்கும் இக்குணம் இருந்தாலும் இவையே முதலாளி வர்க்கம். அடுத்தது மூஞ்சுறு, சுண்டெலி போன்றவை வர்க்கக் கோட்டிற்குக் கீழே வாழும் சாதி. எனக்குத் தெரிந்து சாதாரண எலிதான் நடுத்தர வர்க்கம். நிற்க. இனி, நாம் சில அபூர்வமான செய்திகளைக் காணப்போகி...

முன்பெல்லாம் எனக்குத் தெரியாது

முன்பெல்லாம்   எனக்குத் தெரியாது கூற்றுவன் எனப்படும் அந்தப் பொல்லாத எமனை . இப்போது தெரிந்து கொண்டேன் . அந்த எமன் என்பவன்… பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை …   பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு . (திருக்குறள்)

Modal Auxiliaries

  Modal Auxiliaries and their uses – Sr No. Modal Auxiliary Use 1 Can Ability   2 Should Advice  ,  duty , Suggestion  3 Must Obligation , compulsion 4 May Permission , probability , less certainty 5 May not Prohibition  6 Will Certainty   7 Would, Could Request   8 Might Possibility   e.g. 1) I shall buy a scooter next month.           (Idea: showing ability) Correct form is, I can buy a scooter next month. 2) Students may obey their parents.           (Idea: advice) Correct form is, Students should obey their parents. 3) They need to be protected.           (Idea: obligation) Correct form is, They must be protected.                                                    ...