அக்டோபர் 31 : 1875 சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள். அக்டோபர் 31 : 1902 பசிபிக் பெருங்கடலின் குறுக்காக முதல் தந்திக் கம்பி அமைக்கப்பட்டது. அக்டோபர் 31 : 1931 தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ சென்னையில் திரையிடப்பட்டது. இதே படம் தெலுங்கிலும் முதல் பேசும் படமாகும். ஏனெனில் படத்தின் கதாநாயகி பேசுவது பாடுவதெல்லாம் தமிழில் கதாநாயகனோ தெலுங்கில் பேசிப் பாடுவான். அக்டோபர் 31 : 1962 இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதால் பலத்த கண்டனத்திற்குள்ளான பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கே. மேனன் பதவி விலகினார். அக்டோபர் 31 : 1984 இந்திரா காந்தி தன் மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்டோபர் 31 : 1984 இளம் வயது இந்தியப் பிரதமராக இந்திராவின் மகன் ராஜிவ் 40 வயதில் பதவியேற்றார். அக்டோபர் 31 : 1986 தமிழ்நாடு மேல் சபை ஒழிக்கப்பட்டது. அக்டோபர் 31 : 1990 புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எல். வசந்தகுமாரி காலமானார். அக்டோபர் 31 : 1992 ‘பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது’ என்று வலியுறுத்தியதால் சர்ச் நிர்வ...