Skip to main content

பிப்ரவரி 4

 

 பிப்ரவரி 4, 1747 

பரமார்த்த குரு கதை, தேம்பாவணி, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் முதலிய நூல்களை எழுதிய வீரமாமுனிவர் மறைந்த நாள் இன்று.

எங்கோ பிறந்தும் இங்கேயே வாழ்ந்தது வரலாறானவர் 

பிப்ரவரி 4, 1916 

காசி இந்து சர்வ கலாசாலையை காந்திஜி தொடங்கி வைத்தார்.

பிப்ரவரி 4, 1922 

இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்ற பாடகர் பண்டிட் பீம்சேன் சோசி  பிறந்த நாள். 

இவரது பக்தி இசைப்பாடல்களும் பஜனைப்பாடல்களும் உலகம் முழுதும் பிரபலமானவை. 

பாரத் ரத்னா விருது பெற்றவர் இவர்.

பிப்ரவரி 4, 1943 

பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் பிறந்த நாள். 

பிப்ரவரி 4, 1944 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் அமைந்த சுதந்திர இந்திய அரசு ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவை மீட்க டில்லி சலோ என்ற முழக்கத்துடன் படையெடுத்தது.

பிப்ரவரி 4, 1974 

உலகப் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சத்யந்திரநாத் போஸ் காலமானார். 

கதிர்வீச்சின் தன்மைகளைப் பற்றிய போஸ் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் என்ற கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் இவர் .


பிப்ரவரி 4 1978 

ஸ்ரீலங்காவின் முதல் அதிபராக ஜெயவர்தனே பதவியேற்றார்.

பிப்ரவரி 4 2023 

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைந்த நாள். 

கடினமான பாடல்கள் என்றாலே கலைவாணி தான் (வாணியின் இயற்பெயர் கலைவாணி தான்) என்று இசை உலகில் பெயரெடுத்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட 19 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். 

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ.. 

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்... 

என்று இவர் பாடிய ஒவ்வொரு பாடலும் அடிமனதில் சுவடுகளைத் தொட்டுவிடும். 
 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...