Skip to main content

பிப்ரவரி 20

 

பிப்ரவரி 20,1841

தூக்கம் வரவைக்கும் மருந்தைக் கண்டுபிடித்த வில்ஹம் ஆடம் பெர்டினாண்ட் ஜெர்மனியில் இன்று காலமானார். அந்த மருந்துக்கு அவர் ரோமர்களின் தூக்கக் கடவுளான மார்பியசின் பெயரால் அதற்கு மார்பின்(Morphine) என்று பெயரிட்டார்.



பிப்ரவரி 20,1876 

தமிழகத்தின் சிறந்த புலவராகவும், தமிழறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கிய பண்டிதர் கா. ரா. நமச்சிவாய முதலியார் பிறந்த தினம். 

பிப்ரவரி 20,1878 

சிவக்கவிமணி என்று போற்றப்படும் சி. கே. சுப்பிரமணிய முதலியார் பிறந்த தினம். 

தொழில் முறை வழக்கறிஞராக இருந்த போதும் மிகச்சிறந்த  தமிழறிஞராக மிளிர்ந்தவர். பெரிய புராணத்திற்கு உரையெழுதிய உரையாசிரியர் இவர். 

சிரமமான நேரங்களில் இவர் செய்த உதவியை மறக்காத செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்  தன்  ஒரு மகனுக்கு  சுப்பிரமணியன் என்ற இவருடைய  பெயரையும்  தன் மகளுக்கு சிவக்கவிமணியின் மனைவியான மீனாட்சியின் பெயரையும் சூட்டி தன் நன்றியுணர்வால்  சிவக்கவிமணியை நெகிழ வைத்தார்.  

பிப்ரவரி 20,1947 

மவுண்ட் பேட்டன் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

பிப்ரவரி 20,1955 

டிஎன்ஏ DNA என்னும் டியோ ஆக்சி ரிபோ நியூக்ளிக் ஆசிட் தான் குரோமோசோமின் மரபுப் பொருள் என்பதைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி அஸ்வால்ட் தியோடர் அவரி இன்று காலமானார். 

பிப்ரவரி 20,1960

தமிழ் எழுத்தாளர் வை. மு. கோதை நாயகி அம்மாள் மறைந்த தினம்.

பெரிய புராணத்தின் முதல் பாடல்- 'உலகெலாம் உணர்ந்து' என்று தொடங்கும்.. 

சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததாக எண்ணப்பட்டு, அதிலிருந்து வந்த வாழ்த்துப் பாடல் இது.


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.


சேக்கிழார் போல   தனக்கும் 'உ, து'  வை அமைத்துக் கொண்டவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.

அதை ஒரு சுவாரஸ்யமான சென்டிமென்ட் என்று எடுத்துக் கொண்டாலும் சரி தான்.

அவர் எழுதிய நாவல்கள் மொத்தம் 115. ஒன்றிரண்டு நாவல்கள் தவிர அவரது அனைத்து நாவல்களும் 'உ' என்ற எழுத்தில் தொடங்கி 'து' என்ற எழுத்தில் முடிகின்றன.

முறையான எந்தப் படிப்பும் இல்லாமல் கல்யாணம் செய்துகொடுக்கப்பட்ட கோதைநாயகியை கல்வி அறிவு தந்து ஒரு படைப்பாளியாக அறிவுலகம் போற்றும் அளவுக்கு உயர்த்தியது அவரது மாமியாரின் அதீத அக்கறை. 

5 வயதில் அவருக்குத் திருமணம். கணவனுக்கு வயது அப்போது 9.

எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு வாய்மொழிக் கதைகள் தான் வழிகாட்டியாக இருந்தன.

நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி எல்லாம் இப்படிப் படித்துக் கொண்டவைதான். 

திருமணம் ஆன பின் தான் முறையாகத் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஆங்கிலம் இரண்டையும் கற்றுக் கொண்டார். தன் தோழியர் நடுவில் விளையாட்டுப் போக்கில் கதை சொல்லத் தொடங்கி அது அவரது திறமையை அடையாளம் காட்டுவதாக மாறியது.

பத்திரிக்கைத் துறையில் அவர் நீண்ட காலம் பத்திரிக்கை ஆசிரியர், வெளியீட்டாளர் என புகழ் பெற்றார். முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு மேடையில் இசைப் பாடல்கள் பாடி வந்தார். அவர் எழுதிய இசைப் பாடல்கள் (கீர்த்தனைகள்) புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படத் தணிக்கை துறையிலும் பணியாற்றியிருக்கிறார்.

இன்று உரைநடைத் தமிழ் என்றால் தவிர்க்க முடியாத ஒரு பெயர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.

படிப்பறிவில்லாத ஒரு பெண்ணுக்குள் இத்தனை ஆளுமை. ஒரு பெண்ணால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சரியான பதில் கோதைநாயகி அம்மாள் வாழ்க்கை.

பிப்ரவரி 20,1986

ரஷ்யா மிர் என்னும் நவீன விண்வெளி நிலையத்தைச் செலுத்தியது. மிர் என்றால் சமாதானம் என்று பொருள். விண்வெளி வீரர்கள் நீண்ட நாள் தங்குவதற்கான வசதிகள் கொண்டது இது. இதில் தான் சோயஸ் டி எம் 2 வில் சென்ற விண்வெளி வீரர்களான யூரி ரோமா எனங்கோவும், அலெக்சாண்டர் லா வெய்க்கினும் நீண்ட நாட்கள் தங்கி இருந்தனர். ரொமாநென்கோ 326 நாட்கள் இந்த நிலையத்தில் தங்கியிருந்தார்.

பிப்ரவரி 20,1987 

அருணாச்சலப் பிரதேசம் தனி மாநிலமானது.

பிப்ரவரி 20,2001

விசிறி சாமியார் என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் மறைந்த நாள்.


பிப்ரவரி 20,2011
 
பிரபல  பின்னணிப் பாடகர்  மலேசியா வாசுதேவன் மறைந்த நாள்.  திரைப்படப் பின்னணிப் பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும்  இசை அமைப்பாளராகவும் இருந்தவர் இவர். 8000 பாடல்களுக்கு மேல்  தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்  மலேசியா வாசுதேவன். 

முதல் மரியாதை படத்தில் வரும் பூங்காற்று திரும்புமா என்ற பாடல் இவர் பாடிய பாடல்களுள் இவருக்குப் பிடித்த பாடல்.  

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர்  2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று மறைந்தார். 

பிப்ரவரி 20,2011
 
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகையான  எஸ்.என். லட்சுமி  மறைந்த தினம்.

இருநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர் இவர்.  சில தொலைக்காட்சித் தொடர்களில்கூட நடித்துள்ளார்.  மைக்கேல் மதன காமராஜன், மகாநதி,விருமாண்டி, தேவர் மகன், வானமே எல்லை என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...