Skip to main content

பிப்ரவரி 9

 

பிப்ரவரி 9, 1818 

லித்தியம் என்னும் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது.


பிப்ரவரி 9,1919 

இசைமேதை மதுரை சோமு பிறந்த நாள்.

'மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலைக் கேட்டு மயங்காதவர்கள் இருக்க முடியாது. இந்தப் பாடலைப் பாடியவர் மதுரை சோமு.

மேடைகளில் மட்டுமே பாட விருப்பம் கொண்ட இவரை இந்த தெய்வீகப் பாடலைப் பாடவைத்தது திரையுலகம்.

மதுரை சோமு என்று அழைக்கப்படும் இவர் உண்மையில் மதுரைக்குச் சொந்தமானவர் இல்லை. இவர் பிறந்தது சுவாமிமலை. பின்னர் குடிபெயர்ந்து தான் மதுரைக்கு வந்தார். 

 இவர் மனைவியின் பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் இருக்கக்கூடிய திருக்கருகாவூர். இளமைக் காலத்தில் இவர் இசை பயின்றது சுவாமிமலை அருட்பாக் கலைஞர் ஸ்ரீனிவாச பிள்ளையிடம். அந்த வேளையில் இவர் இசை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. மல்யுத்தத்தையும் சேர்த்துக் கற்றுக் கொண்டார்.

காம்போதி சங்கராபரணம், மலையமாருதம் ஆகிய ராகங்களில் மணிக்கணக்காகப் பாடக்கூடிய ஆற்றல் பெற்றவர் மதுரை சோமு.

 எந்த ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டாலும் இவருடைய குரல் வளத்தில் அது நிறைவு பெற்றுவிடும் என்பது இசை வல்லுனர்களின் விமர்சனம். 

இவர் ஐ.நா சபையிலும் பாடியிருக்கிறார். பத்மஸ்ரீ பட்டமும் பெற்றிருக்கிறார். 

இந்த இசைமேதை சுவாமி மலையில் பிறந்த நாள் பிப்ரவரி 9, 1919.

பிப்ரவரி 9,1949 

வ உ சிதம்பரனார் என்னும் நீராவி கப்பல் தூத்துக்குடியில் விடப்பட்டது.

பிப்ரவரி 9,1951 

இந்தியாவில் முதன் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

பிப்ரவரி 9,1969 

உலகின் மிகப்பெரிய விமானமான போயிங் 747 தன் முதல் பயணத்தை இன்று துவக்கியது.



பிப்ரவரி 9, 1984 
பாரத பரதநாட்டியக் கலைஞர்  தஞ்சாவூர் பாலசரஸ்வதி மறைந்த நாள்.

 பிப்ரவரி 9, 1996

வீணை சிட்டிபாபு   மறைந்த நாள். வீணை இசையில் புகழ்பெற்றதால்  சிட்டி பாபு என்ற இவருடைய பெயரோடு வீணை பிரிக்கமுடியாத ஒன்றாகி  வீணை சிட்டிபாபு  என்றே அழைக்கப்பட்டார்.  

பிப்ரவரி 9, 2001

நகைச்சுவை எழுத்தாளர்களுள் முக்கியமானவரான சாவி மறைந்த நாள். 

 சா.விசுவநாதன் என்பது இவருடைய முழுப்பெயர்.கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார்.

வாஷிங்டனில் திருமணம் என்ற இவருடைய நகைச்சுவை நாவல் பெரும் புகழ்பெற்ற  நாவல்.

பிப்ரவரி 9, 2008

சமூக சேவகர் பாபா ஆம்தே மறைந்த நாள். 

இவருடைய இயற்பெயர்  முரளிதர் தேவதாசு ஆம்தே. பத்ம ஸ்ரீ , பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றவர் இவர்.  இவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவத்தை  தன்னுடைய வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தவர். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...