Skip to main content

பிப்ரவரி 19

 

பிப்ரவரி 19,1855

தமிழ்த் தாத்தா என்று புகழ் பெற்ற உ. வே. சாமிநாதையர் பிறந்த நாள்.

கண்ணுஞ் சடையாமல் கையுந் தளராமல்

உண்ணப் பசியெழுவ தோராமல்- எண்ணி எண்ணிச்

செந்தமிழ்த் தாய்க்கு நீ செய்த திருத்தொண்டுக்கு

இந்த நிலத் துண்டோ இணை ?

(உ. வே. சா  குறித்து கவிமணி...)


உ.வே.சாமிநாதய்யர் அழியும் நிலையில் இருந்த, பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு, தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தவர். 


90 புத்தகங்களுக்கு மேல் அச்சிட்ட இவர், 3000 ஏட்டுச்சுவடி, கையெழுத்து ஏடுகளையும் வைத்திருந்தார்.


சீவக சிந்தாமணி போன்ற அரிய படைப்புகளை அழிய விடாமல் காக்க வேண்டும் என்று அதை பதிப்பில் கொண்டுவந்தவர் இவர். 


சீவக சிந்தாமணிக்குப் பின்னர், பத்துப்பாட்டு நூலையும் இவர் வெளியிட்டார்.

பிப்ரவரி 19,1878 

கிராமபோன் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் இன்று அதற்கான காப்புரிமம்  பெற்றார்.

பிப்ரவரி 19,1915

கோபால கிருஷ்ண கோகலே மறைந்த நாள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் கோகலே.

பிப்ரவரி 19,1947 

நகைச்சுவை நடிகர் பாண்டு பிறந்த நாள்.  

இவர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பிரபலமான  'பஞ்சு பட்டு பீதாம்பரம்' தொடரை  இவருடைய நடிப்புக்காகவே பார்த்தவர்கள் பலர்.  தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் ஒரு திறமையான ஓவியரும் கூட.  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இவர் மீது அளவில்லாத பாசம் வைத்திருந்தார்.  எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியைத் தொடங்கியபோது, அதிமுகவின் கொடியையும், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையையம்  வரைந்து வடிவமைத்த ஓவியர் இவர்தான்.

அதற்கு முன்பாகவே  எம்.ஜி.ஆர். நடித்த குமரிக்கோட்டம், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களில் ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் பணியை  எம்.ஜி.ஆர். இவரிடம் தான் ஒப்படைத்தார். 

கொரோனா தொற்று பலி கொண்ட பிரபலமானவர்களுள் இவரும் ஒருவர்.  கொரோனா  சிகிச்சை பலனின்றி மே 6, 2021 அன்று மறைந்தார்.

பிப்ரவரி 19,1956 

ஆச்சார்ய நரேந்திர தேவ் காலமானார்.

பிப்ரவரி 19, 1988 

புகழ்பெற்ற நாடக நடிகரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி. சகஸ்ரநாமம் இன்று சென்னையில் காலமானார்.

1913 நவம்பர் 29, அன்று கோவை சிங்காநல்லூரில் பிறந்தவர் இவர். நாடக நடிகராக பெரும்புகழ் பெற்றவர். நாடகக் கலையை அழியாமல் காப்பாற்ற முனைந்தவர்களுள் இவர் முக்கியமானவர். இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர். 200க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...