Skip to main content

மார்ச் 1

 மார்ச் 1 1639 

சென்னை மாநகராட்சியின்  பிறந்த நாள் இது என்று சொல்லலாம்.  கூவம் நதிக்கரையில் கடற்கரை ஓரத்தில் ஆங்கிலேயர்கள் ஒரு பண்டகசாலையை நிறுவினார்கள். அந்தப் பண்டக சாலையைச் சுற்றி பின்னாளில் கட்டிய கோட்டை தான் செயின் ஜார்ஜ் கோட்டை.

மார்ச் 1,1640 

செயின் ஜார்ஜ் கோட்டை இன்று தான்  கட்ட ஆரம்பிக்கப்பட்டது.



மார்ச் 1.1869
வேதியியலில்  மெண்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை நிறைவு செய்து வெளியீட்டுக்கு ஒப்புதல் அளித்தார்.  

மார்ச் 1.1873 
முதலாவது  தட்டச்சுப் பொறியை (Typewriter) ரெமிங்டன் சகோதரர்கள் நியூயார்க்கில் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர்.

மார்ச் 1.1896 

வேதியலில் ரேடியோ வேதியியல் துறை பிறந்தநாள். 

பொட்டாசியம் சல்பேட்டின் தன்மைகளைப் பற்றி ஆய்வு செய்யும் போது இயற்கையாகவே அதற்கு கதிர்வீச்சுத்  தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  ஒளிப்படத் தகட்டின் மீது  அது வினை புரிவதும்  தெரிந்தது.  இந்தக் கண்டுபிடிப்புத் தான் ரேடியோ வேதியல் துறை என்ற ஒரு புதிய துறை பிறக்க வழி வகுத்தது.

மார்ச் 1,1908 

பீகாரில் ஜாம்செட்பூர் என்று இன்று கூறப்படுகின்ற சாக்ஸி என்னும் இடத்தில் இந்தியாவின் முதல் இரும்பு  எக்கு கம்பெனி நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி துவங்கியது.

மார்ச் 1,1910

M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள்.



தமிழ்த்திரை வரலாற்றில் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் தான். 

நாடகத் துறையில் தனது வெண்கலக் குரலால் ரசிகர்களை வசப்படுத்தியிருந்த ஏழிசை ஏந்தல், கந்தர்வகான ஜோதி எனப் புகழ் மகுடம் சுமந்திருந்த பாகவதர் திரைப்படத் துறையில் நுழைந்த போது நல்ல வரவேற்பு கிடைத்தது.

1937 இல் சிந்தாமணி படம் வெளிவந்தது. அதே ஆண்டின் இறுதியில் அம்பிகாபதி படம் வெளிவந்தது. இரண்டு படங்களும் சாதனைப் படங்கள். திரையிட்ட இடங்களில் எல்லாம் ஒரு வருடம் ஓடியது. பாகவதரின் புகழ் திரும்பிய பக்கமெல்லாம் பேசப்பட்டது.

 கலை மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தாரோ அதேபோல நாட்டுப்பற்றும் கொண்டவர் பாகவதர்.

 நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி இருந்தபோது இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானது. அந்தப் போரில் ஆங்கில அரசுக்கு நிதி தேவைப்பட்டது. அந்த வேளையில் பாகவதர் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி பெரும் நிதியை அரசிடம் அளித்தார். பாகவதரின் நாட்டுப்பற்றை அன்றைய கவர்னர் பெரிதும் பாராட்டினார். 

 பின்னர் போர் முடிவுக்கு வந்த நிலையில் ஆங்கிலேய அரசு தங்களுக்கு நெருக்கடி காலத்தில் உதவிய பாகவதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் திருச்சியில் அரசுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க முன் வந்தது. ஆனால் பாகவதர் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

அன்று அரசு பாகவதருக்குக் கொடுக்க விரும்பிய நிலத்தில் தான் இன்று திருச்சி பாய்லர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

 இன்று 1.3.1910 தியாகராஜ பாகவதர் பிறந்தநாள்.

மார்ச் 1,1992

 பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற  சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்கப்படும் என அழைக்கப்படும் சூலமங்கலம்  ஜெயலட்சுமி, சூலமங்கலம்  ராஜலட்சுமி ஆகிய சகோதரிகளுள்  ஒருவரான  சூலமங்கலம்  ராஜலட்சுமி மறைந்த நாள்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...