Skip to main content

பிப்ரவரி 11

 

பிப்ரவரி 11, 1799 

ஆக்சிஜன் இல்லாமலேயே சில நுண்ணுயிரிகள் (Anerobiosis) உயிர் வாழ முடியும் என்பதை முதன்முதலாக மெய்ப்பித்துக் காட்டிய இத்தாலியைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி லாசரோ ஸ்பால்லான்ஸானி இன்று காலமானார்.

பிப்ரவரி 11,1802

தென்தமிழ்நாட்டில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்த தலைவர்களில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்ற முக்கிய தலைவர்கள் 73 பேர் தூத்துக்குடியிலிருந்து அட்மிரல் நெல்சன் என்னும் கப்பல் மூலமாக பினாங்கிற்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு இன்று நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டனர்.

15 வயதே நிரம்பிய மருது பாண்டியர் மகன் துரைச்சாமி,

ராமநாதபுரம் ஜெகநாத ஐயர்,

பாஞ்சாலங்குறிச்சி தளவாய் குமாரசாமி நாயக்கர்,

தளவாய் பிள்ளை,

தூத்துக்குடியில் புரட்சிக்கு தலைமை தாங்கிய பெத்தநாயக்கர்,

திண்டுக்கல் அழகு சொக்கு,

நாங்குநேரி இருளப்பதேவர்,

கொம்பாடி பாண்டிய நாயக்கர் முதலியோர் இதில் அடங்குவர்.

பிப்ரவரி 11,1847 

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள். 

1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த புகழ்பெற்ற அமெரிக்க விஞ்ஞானியாக விளங்கியவர்  எடிசன்.

பிப்ரவரி 11,1908

ஜி.யு.போப் மறைந்த நாள். 

பிப்ரவரி 11,1914 

தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்ற தில்லையாடி வள்ளியம்மை மாரிட்ஸ் பர்க் சிறையிலிருந்து இன்று விடுதலையானார்.

பிப்ரவரி 11,1917

அமெரிக்க எழுத்தாளர்  சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon)  பிறந்த நாள். 

இவர் திரைப் படங்களுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானவர். 

தனது 50வது வயதைக் கடந்த  பின்னர் நாவல்கள்  எழுதினார். அந்த நாவல்கள் எண்ணிக்கையில்  ஒரு சில தான் என்றாலும் ஒவ்வொரு நாவலும் உலக அளவில் பேசப்பட்டது. 

மாஸ்டர் ஆப் த கேம், ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ், தி அதர் சைட் ஆஃப் த மிட் நைட் எல்லாம் உலகம் பூராவும் வரவேற்பைப் பெற்ற இவருடைய நாவல்கள். 

பிப்ரவரி 11,1968

தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்த  பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மறைந்த தினம்.  இந்தியத் தத்துவத்தில் தலைசிறந்த அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல்தலைவர்  போன்ற பன்முகத் தன்மை கொண்ட சிந்தனையாளர் இவர். பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர் எனக் குறிப்பிடப்படுபவர் . 

பிப்ரவரி 11,1974 

பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்  கண்டசாலா மறைந்த தினம்.  

அவருடைய முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் .

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 'கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம்' என்ற புகழ் பெற்ற பாடல் இவர் இசையமைப்பில் வந்தது தான்.

'முத்துக்கு முத்தாக

சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக'


ஆஹா இன்ப நிலாவினிலே

ஓஹோ ஜெகமே ஆடிடுதே

ஆடிடுதே...விளையாடிடுதே’  

போன்ற பாடல்கள்  காற்றில் வரும்போதெல்லாம்  அந்தக்குரலுக்குச் சொந்தக்காரரான கண்டசாலாவின் நினைவும் கூடவே வரும். 

1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். 

திருமலை திருப்பதி கோவிலின் ஆஸ்தான பாடகராக இருந்தவர் இவர். 

அவரது நினைவைப் போற்றும் வகையில் 2003-ல் தபால்தலை வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 11,1977

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக  இருந்த பக்ருதின் அலி அகமது மறைந்த நாள்.  1974 முதல் 1977 வரை  இவர் குடியரசுத் தலைவராக இருந்தார். 

பிப்ரவரி 11,1979 

அந்தமான் சிறை தேசிய சின்னமாக்கப்பட்டது.


பிப்ரவரி 11,1990

 27 ஆண்டுகள் சிறையில் இருந்த தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.




Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...