Skip to main content

பிப்ரவரி 13

 

பிப்ரவரி 13, 1879

கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை என பன்முக அடையாளம் கொண்ட கவிக்குயில் சரோஜினி நாயுடு   பிறந்த நாள்.

பிப்ரவரி 13, 1907 

காஞ்சி பரமாச்சாரிய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் இன்று 68 வது பீடாதிபதியாகப் பட்டம் ஏற்றார்.



பிப்ரவரி 13, 1920

திரைப்படப் பாடலாசிரியர்  மருதகாசி பிறந்த  தினம். 

 A. M. ராஜா , P. சுசீலா இணைந்து பாடிய 

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே 

ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!  

என்ற பாடலைக் கேட்கும் எவரின்  மனமும் உருகிப்போகும்.  அந்தப் பாடலை எழுதியது மருதகாசி தான். 

இவர் நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே 

என்றும் நம்ம வாழ்க்கையில் பஞ்சமேயில்ல ....

என்ற பாடலை டி.எம். சௌந்தரராஜன் குரலில் கேட்டிருப்போம். அதுவும் மருதகாசியின் பாடல் தான். 

பிப்ரவரி 13, 1929

பென்சிலினியம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை டாக்டர் அலெக்ஸாண்டர் பிளமிங் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் இன்று படித்தார். 

பிப்ரவரி 13,1939 

கரைசலில் உள்ள அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையை அளந்தறிய பி.ஹெச் (PH- POTENTIAL OF HYDROGEN)முறையை அறிமுகப்படுத்திய லாரிட்ஸ் சொரென்ஸன் இன்று காலமானார்.

பிப்ரவரி 13,1950 

செய்குத் தம்பி பாவலர் மறைந்த நாள்.

முகமதியப் புலவராக இருந்து, அனைத்து சமயத் தத்துவ ஆழங்களை உணர்ந்து உரைக்கும் செறிவு கொண்டவராக செய்குத்தம்பி பாவலர் (1874-1950) விளங்கினார்கதராடையும் காந்தி குல்லாயும் அணிந்து விடுதலை உணர்வைப் பரப்பியவர்

இசுலாமிய மித்திரன் எனும் இதழை நடத்தியவர்

சீறாப்புராணத்துக்கு உரை எழுதியவர்

அந்தாதிகள், கோவைகள், பாமாலை, மஞ்சரி, நீதி வெண்பா மற்றும் பல்வேறு உரைநடை நூல்களையும், ஆனந்த களிப்பு எனும் மொழிபெயர்ப்பையும், சாற்றுக் கவிகள், வாழ்த்துக்கவிகள், சிலேடைக் கவிகள், சீட்டுக் கவிகள் எனப் பன்னூறு பாக்களையும் அளித்தவர்.

பிப்ரவரி 13,1976 

மத்திய அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தடை செய்யப்பட்டது.

பிப்ரவரி 13,1987 

சென்னை மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.பக்தவத்சலம் மறைந்த நாள். 

விடுதலைப் போராட்டக் காலங்களில் சிறைக்கொடுமைகளுக்கும், சித்திரவதைக்கு ஆளான தேச பக்தர் இவர். 

பிப்ரவரி 13, 2014

திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான  பாலு மகேந்திரா மறைந்த நாள்.  

வீடு, மூன்றாம் பிறை உள்ளிட்ட பல காலம்கடந்து நிற்கும் திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் வந்தவை.

இன்று

உலக வானொலி தினம்

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...