Skip to main content

பிப்ரவரி 3

பிப்ரவரி 3, 1900 

இரட்சணிய யாத்திரிகம் எழுதிய எச். ஏ. கிருஷ்ணபிள்ளை மறைந்த நாள். 

இவரை கிறித்துவக் கம்பர் என்று குறிப்பிடுவர்.

பிப்ரவரி 3, 1925

இந்தியாவின் முதல் மின்சார ரயில் பம்பாயில் இருந்து விடப்பட்டது.

 


 பிப்ரவரி 3, 1925 

ஒரே டெலிபோன் லைன் ஒரே சமயத்தில் பல செய்திகளை தாங்கிச் செல்ல முடியும் என்று முதன் முதலில் கூறியவரும் மின்காந்தக் கொள்கை எனும் நூலின் ஆசிரியரும் பிரிட்டிஷ் மின் பொறியாளருமான ஆலிவர் ஹெவி சைட் காலமானார்.

 பிப்ரவரி ,3 1928

சர் ஜான் சைமன் தலைமையில் ஏழு பேர் கொண்ட சைமன் குழு பம்பாய் வந்து சேர்ந்தது. அரசு நிர்வாகம் கல்வி வளர்ச்சி, பிரதிநிதித்துவ அமைப்புகளின் முன்னேற்றம் முதலானவற்றைத் தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள். எனவே இந்திய மக்கள் இக்குழுவைப் புறக்கணித்தனர்.

  பிப்ரவரி 3, 1966 

சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையை இன்று  பெற்றது.

  பிப்ரவரி 3, 1969 

முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை காலமானார்.

  பிப்ரவரி 3, 1988 

இந்தியாவின் முதல் அணு நீர்மூழ்கிக் கப்பல்   நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...