Skip to main content

பிப்ரவரி 22

 

பிப்ரவரி 22, 1815 

கார்பனின் ஒரு வடிவமே வைரம் என்று கூறியவரும் இருடியம், ஆஸ்மியம் என்னும் இரண்டு புதிய தனிமங்களை கண்டுபிடித்தவருமான பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்மித்சன், பிரான்ஸில் போவ்ளோகன் என்னும் இடத்தில் ஒரு மரப்பாலத்தைக் குதிரை மீது கடக்கும்போது பாலம் முறிந்து விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்தார்.

பிப்ரவரி 22, 1857 

 சாரணர் இயக்கத்தை  நிறுவிய பேடன் பவல்  பிறந்த நாள். 

பிப்ரவரி 22, 1898 

தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாளும் மறைந்த நாளும்  ஒரே தேதி பிப்ரவரி  22.  

மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டவர் இவர். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி  இவர்.  

இவர் பிறந்த நாள் 22.2.1898.  மறைந்த நாள் 22.2.1914.

பிப்ரவரி 22,1943

ஆன்டிபயாட்டிக் (antibiotic) என்ற சொல்லுக்கு இன்றைய நாள் மிகுந்த தொடர்புடையது. ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய டாக்டர் செல்மன் வேக்ஸ்மானும் அவரது குழுவினரும் இன்று தான் Streptomycin என்னும் antibiotic மருந்தைக் கண்டுபிடித்தனர். இந்த மருந்து காச நோய்க்குப் பெரிதும் பயன்படுத்தப்படுவதாகும். ஆன்டிபயாட்டிக் antibiotic என்ற சொல்லையும் இவர் தான் முதல்முதலில் உருவாக்கினார். 


பிப்ரவரி 22,1944 

கஸ்தூரிபா காந்தி மகா சிவராத்திரி தினமான இன்று மாலை 7.35 க்கு சிறைச்சாலையில் காலமானார்.

 பிப்ரவரி 22,1958 

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும் சாகித்ய அகடமி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி ஆகியவையெல்லாம் உருவாகக் காரணமாக இருந்தவருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் இன்று காலமானார்.

பிப்ரவரி 22,1992 

மறைந்த தலைவர்களான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோருக்கு ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பாரத ரத்னா விருது வழங்கினார்.

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...