Skip to main content

பிப்ரவரி 17

 

பிப்ரவரி 17, 1863 

ஜெனீவாவில் இன்று  பொதுமக்கள் சிலர் சேர்ந்து போரில்  காயமடைந்தோர்க்கான சிகிச்சை மற்றும்  நிவாரணக் குழுவை  அமைத்தனர். இந்தக் குழு தான்  பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டது. 

எனவே இந்த நாள் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்ட நாள் என்று குறிப்பிடப்படுகிறது. 


பிப்ரவரி 17, 1897 

ரூடால்ப் டீசல் கண்டுபிடித்த எஞ்சின் பெட்ரோலியம் ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி முதன் முதலாக இன்று ஓட தொடங்கியது.

பிப்ரவரி 17, 1936

சிறுவர்களுக்கான புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரம் மாயாவி (The Phantom) முதல் தடவையாக சித்திரக் கதைகளில் இடம்பெற்றது.   

தினமணி கதிர், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் ஆகியவற்றில் மாயாவி சித்திரக்கதைகள் வெளிவந்தன. மாயாவி சித்திரக் கதைகள்  தொலைக்காட்சித் தொடராகவும்  திரைப்படங்களாகவும் வெளிவந்தன. 

பிப்ரவரி 17, 1956 

தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை மறைந்த நாள்.

இருபதாம் நூற்றாண்டின்  தமிழ் ஆராய்ச்சியாளர்களில்  குறிப்பிடத்தக்க ஒருவர் இவர்.  திறனாய்வாளர்,  மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை ஆசிரியர், கவிஞர்  எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். 

12 அக்டோபர் 1891 இவர் பிறந்த நாள்.

பிப்ரவரி 17,1986 

20ஆம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளரும் உலக ஆசிரியர் என்று போற்றப்படுபவருமான J.K என்று அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அமெரிக்காவில் காலமானார்.



 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...