Skip to main content

எங்கோ பிறந்தும் இங்கேயே வாழ்ந்தது வரலாறானவர்

வந்தது என்னவோ மதத்தைப் பரப்பத் தான்

கிறித்துவ மிஷனரிகளால் இத்தாலியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அவர் 1710ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்

Constantine Joseph Beschi என்பது அவர் பெயர்.

மதுரை வந்த அவர் காமநாய்க்கன்பட்டி வந்து தங்கினார். மதத்தைப் பரப்ப வேண்டும் என்றால் அந்த மக்களோடு பேச பழக தமிழ் தெரிந்தால் தான் முடியும் என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் . அதன் விளைவாய் இலக்கண இலக்கியம் கற்று இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.

மதுரைத் தமிழ் ஆசிரியரின் பெரும் திறமையும் தமிழ்ப் பாடங்களில் அவர் காட்டிய ஈடுபாடும் வியக்கத்தக்க அளவிலான தமிழ்ப் புலமைக்கு வித்திட்டன. இருபதுக்கும் மேலான தமிழ் நூல்களை அவர் எழுதினார்.

தேம்பாவணி என்ற காப்பியம் அவர் இயற்றியது தான். தமிழைத் தாய்மொழியாக கொண்டிருக்காத ஒரு வெளிநாட்டவர் இயற்றிய ஒரே தமிழ்க் காப்பியம் என்ற பெருமை கொண்டது தேம்பாவணி.

தமிழோடு தன்னை மெல்லமெல்லப் பிணைத்துக்கொண்டார்தன் பெயர் தமிழில்  இருக்க வேண்டும்  விரும்பினார். முதலில் தைரியநாதன் என்றும் அதன் பின் வீரமாமுனிவர் என்றும் பெயரை மாற்றிக்கொண்டார்.

தான் படித்து மகிழ்ந்த திருக்குறள், , தேவாரம் , திருப்புகழ் , நன்னூல் எனத் தமிழ் நூல்களை ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

தமிழ்- லத்தீன் மற்றும் தமிழ்- போர்ச்சிக்கீசிய அகராதிகளை உருவாக்கினார்.

தமிழ் அகராதிகள் எல்லாம் அப்போது நிகண்டுகளாக அதாவது பாடல் வடிவில் இருந்தன. எல்லோரும் பயன்படுத்த முடியுமாறு உரைநடை வடிவில் முதல் அகராதியை உருவாக்கினார். அது தான் சதுரகராதி

தான் கற்றுணர்ந்த பின் தமிழ் எழுத்து, சொல், பொருள், யாப்புஅணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் தொகுத்து தொன்னூல் விளக்கம் என்ற நூலை வெளியிட்டார்

ஆங்கிலத்தில் Written English, Spoken English இரண்டுக்கும் தனித்தனி வழிகாட்டி விதிகள் கொண்ட புத்தகங்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். தமிழுக்கும் எழுத்துத் தமிழ் வேறு, பேச்சுத் தமிழ் வேறு. பேச்சுத் தமிழுக்கு என்று ஒரு நூல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தார். அப்படி ஒரு நூலையும் அவர் எழுதினார். அது தான் கொடுந்தமிழ் இலக்கணம்.

திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். (அறத்துப்பால் மற்றும் பொருட்பால் இரண்டை மட்டும்)

வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களை உரைநடையில் படைத்தவர்.

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை போன்ற நூல்கள் செய்யுள் வடிவில் அமைந்தவை.

இவர் தமிழில் எழுதிய பரமார்த்த குருவின் கதை தமிழில் முதல்  முதலாக வந்த நகைச்சுவை நூல் என்ற பெருமையுடையது. 

தமிழ்ப் புலவர்கள் கூட இத்தனை வகை இலக்கியங்களில் நூல்கள் படைக்கவில்லையே என்று வியக்க வைக்கும் வகையில் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை, செய்யுள் என ஒன்றையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றிலும் நூல்கள் படைத்தார்.

எங்கோ ஒரு சீமையில் பிறந்து (8.11.1680), எதற்காகவோ இங்கு வந்து, தமிழில் தன்னைப் பறிகொடுத்து, மீண்டும் தன் நாடான இத்தாலிக்குப் போகாமல் இந்திய மண்ணிலேயே தன் இறுதிவரை வாழ்ந்தார்

தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்ற அவர் தன் 67 ஆவது வயதில் அங்கேயே உயிர் நீத்தார்.. அந்த நாள் பிப்ரவரி 4, 1747.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...