Skip to main content

என்னையே எல்லாரும் சொல்றாங்க!

அழகாக இருக்கிறது என்று தான் அந்த மான் வேண்டும் என்று கேட்டேன்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய தவறு தான் எல்லாத் துன்பத்துக்கும்  காரணமா?

எனக்குத் தான் தெரியவில்லை அது மாய மான் என்று. ராமனுக்கு அது எப்படித் தெரியாமல் போய்விட்டது.

ஆக அது ராமன் செய்த தவறு தானே!

அப்படியே வைத்துக்கொண்டாலும் ஐயோ என்ற குரல் ராமனுடைய குரல் அல்ல அது போலிக் குரல் என்று லக்ஷ்மணன் சொன்ன போதும் கேட்கவில்லையே நான். 


எனக்கு சொல் புத்தியும் இல்லை; சுய  அறிவும் இல்லை என்று எல்லோரும் என்னையே குற்றம் சொல்வது போலவே தோன்றுகிறது எனக்கு.

இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டே தனிமைச் சிறையில் இருக்கிறாள் சீதை.

தன்  ஆதங்கம் எல்லாம் சேர கோபம் கோபமாக வருகிறது.  யாரையாவது திட்ட வேண்டும் போல இருக்கிறது.

ஆனால் யாரும் இல்லாத தனிமை. 

இப்படியே நேரம் போக,இரவு வந்துவிட்டது. வானத்தில் நிலா வருகிறது. 

நிலாவைப் பார்த்தவுடன் அதுவும் தன்னைக் குற்றம் சொல்வது போலவே தோன்றுகிறது சீதைக்கு. உடனே கோபம் வருகிறது.


"ஏய், அறிவு இல்லாத நிலவே, நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நகராமல் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்.  எனக்கு சொந்த அறிவில்லை என்று எப்படி நினைக்கலாம் நீ? 

உனக்கு  மட்டும்  சொந்த ஒளியிருக்கிறதா என்ன? கதிரவனின் ஒளியில் தானே உன் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

உனக்கு மட்டுமா என்ன? உன் கூடவே வருகிறதே இரவு அதற்காவது அறிவு வேண்டாம்?

 என்னையே எல்லோரும் குற்றம் சொல்கிறீர்கள்.அங்கே தனியாக இருக்கிறானே அந்த இராமன், அவனிடம் யாரும் ஏன்  எதுவும் கேட்பதில்லை?" 


ஒரு பாவமும் அறியாமல் அது பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது  நிலவு. அதன் மேல் தான் இத்தனை கோபம் சீதைக்கு. 


கல்லா மதியே ! கதிர் வாள் நிலவே !

செல்லா இரவே !சிறுகா இருளே !

எல்லாம் எனையேமுனிவீர்; நினையா

வில்லாளனை,யாதும் விளித்திலிரோ ? 

(கம்ப இராமாயணம்)


கல்லா மதியே -அறிவு இல்லாத நிலவே 


கதிர் வாள் நிலவே - கதிரவனின் ஒளியில் வாழும் நிலவே

செல்லா இரவே -செல்லாமல் அப்படியே இருக்கும் இரவே

சிறுகா இருளே -குறையாத  இருளே 

எல்லாம் எனையேமுனிவீர் - எல்லாரும் என்னையே சொல்கிறீர்கள் 

நினையா -என்னை  நினைக்காத

வில்லாளனை -இராமனை

யாதும் விளித்திலிரோ ? - யாரும் கேட்க மாட்டீர்களா? 

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் வாய் பேசத் தெரியாத  இப்படி  ஒரு நிலவு இருக்கும் போல!

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...