Skip to main content

கல்யாணக் கல்யாணக் கனவு...

 கல்யாணக் கனவு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வரும். ஆனால் எப்படியான கனவு என்பது தான் பெண்ணுக்குப் பெண் வேறுபடும்.



அப்படி ஒரு கனவு தான் இந்தப் பெண்ணுக்கும். அந்தக் கனவை தான் தோழிப் பெண்களிடம் சொல்லுகிறாள்.


அது எங்கள் திருமணப் பந்தல். என்னைத் திருமணம் செய்து கொள்ள இருக்கிற மாப்பிள்ளை திருமணப் பந்தலுக்கு வருகிறான். 

அவனை வரவேற்க அழகிய இளம்பெண்கள் நடனமாடிக்கொண்டே வாசலுக்கு வருகிறார்கள். 

அவர்கள் பளீரென ஒளிவீசும் தங்கக் கலசங்களைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார்கள். 

 அதில் தீபங்கள் மின்னுகின்றன.

அந்த மாப்பிள்ளை யார் எனப் பார்க்கும் ஆவல் எல்லோருக்கும்!

மதுரா என்றழைக்கப்படும் வட மதுரையின் மன்னன் கிருஷ்ணன் என்கிற மதுரா கிருஷ்ணன் தான் மாப்பிள்ளை.

ஒவ்வொரு அடியாக வைத்து மணப் பந்தலுக்கு வருகிறான். 

ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் அவன் பாதம் பட்ட நிலம் அதிர்கிறது.

இதோ அவன் இந்தப் பந்தலுக்கு வந்து சேர்ந்து விட்டான். 

இனி எங்கள் கல்யாணம்.

என் கனவில் அவன் பந்தலுக்குள் நுழைவதைத் தான் கண்டேன்.

ஆண்டாள் திருமணக் கனவு இது.


கதிரொளி தீபம் கலசமு டனேந்தி

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

(நாச்சியார் திருமொழி)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...