Skip to main content

ஆகஸ்ட் 30

 ஆகஸ்ட் 30, 1659

ஷாஜகானின் மூத்த மகனும்    பகவத் கீதையை சமஸ்கிருதத்திலிருந்து பெர்ஷிய மொழியில் மொழிபெயர்த்தவருமான தாரா ஷிக்கோவை அரியணைப் போட்டியின் காரணமாக சொந்த சகோதரன் ஔரங்கசீப் இன்று  கொன்றான். 

மறுநாள் தலையற்ற தாராவின் உடலை யானையின் மீது ஏற்றி தில்லி தெருக்களில் ஊர்வலம் விட்டு மகிழ்ந்தான் ஔரங்கசீப்.

ஆகஸ்ட் 30, 1871

அணு இயற்பியலில் முக்கியமான பங்காற்றிய ரூதர் ஃபோர்ட் (Ernest Rutherford) இன்று நியூசிலாந்தில் பிறந்தார்.

ஆகஸ்ட் 30, 1875 

நல்லூர் ஞானப்பிரகாசர் பிறந்த நாள்.

நல்லூர் ஞானப்பிரகாசர் ஒரு பன்மொழிப் புலவர்.  இலத்தின், கிரேக்கம் உட்பட பதினெட்டு மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். 

தமிழின் தொன்மையை உலக அறிஞர்கள் அறிய இவர் எழுத்தும் ஒரு காரணம். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி ஒரு சிறந்த நூலாகும்.

ஜனவரி 22, 1947 இவர் மறைந்த நாள்.

 ஆகஸ்ட் 30, 1957 

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்  மறைந்த நாள். 

நாகர்கோயிலில் நவம்பர் 29, 1908 - அன்று பிறந்தவர். 

பெற்றோர் சுடலைமுத்துப் பிள்ளை, இசக்கி அம்மாள்.  

நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக தனது வாழ்க்கையைத் தொடங்கி தமிழ் நாடக உலகிலும் திரைப்பட உலகிலும்  நகைச்சுவையால் தனி முத்திரை பதித்தவர். 

இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஒரு  பாடகரும் ஆவார்.

சதி லீலாவதி இவரது முதல் திரைப்படம். 

ஆகஸ்ட் 30, 1971

தமிழ்நாட்டில் 23 ஆண்டுகளாக இருந்த மதுவிலக்கை விலக்கி இன்று முதலமைச்சர் கருணாநிதி அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.  இன்று கள் மற்றும் சாராயக் கடைகள் தமிழ்நாட்டில்  திறக்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...