Skip to main content

ஆகஸ்ட் 2

ஆகஸ்ட் 2, 1820

வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது என்பதை முதன் முதலாக செயல் விளக்கமாக செய்து காட்டிய John Tyndal அயர்லாந்து நாட்டில் இன்று பிறந்தார்.

ஆகஸ்ட்  2, 1858 

இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

ஆகஸ்ட்  2, 1859 

ஆபிரஹாம் பண்டிதர் பிறந்த நாள். 

1859 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2  ஆம் தேதி பிறந்த ஆபிரகாம் பண்டிதர் இசைப்பேரறிஞராகத் திகழ்ந்தவர்.

கர்நாடக இசையுலகின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராசர், முத்துச்சாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் இயற்றிய கீர்த்தனங்களும் வர்ணங்களும்  தெலுங்கிலும் வடமொழியிலும் பாடப்பெற்று வந்தன. இவற்றுக்கு ஆபிரகாம் பண்டிதர் தமிழில் பாடல்களை எழுதி அவற்றுக்குத் தாமே இசையமைத்தார். மொத்தம் 96 பாடல்களை இவர் எழுதினார். 

சுவாமி விபுலானந்தர் 'யாழ் நூல்' எழுதுவதற்கு இவரது, 'கருணாமிர்த சாகரம்' நூல் காரணமாக அமைந்தது. 

ஆகஸ்ட்  2, 1876

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த  பிங்கலி வெங்கைய்யா பிறந்த நாள்.

ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திரப்  போராட்ட வீரரான இவர் மற்ற தன்னலம் கருதாத சுதந்திரப்  போராட்ட வீரர்கள் போலவே வறுமையில் வாடியவர்.   

1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் நாள் இவர் மறைந்தார். 

ஆகஸ்ட்  2, 1913 

இலங்கைத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் இன்று பிறந்தார்.

ஆகஸ்ட் 2, 1922

தொலைபேசியைக் கண்டுபிடித்த  அலெக்சாண்டர் கிரகாம் பெல் மறைந்த தினம்.

ஆகஸ்ட்  2, 1934 

ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலர் ஆனார்.

ஆகஸ்ட்  2,1943 

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். அந்தப் போரில் ஈடுபட்டிருந்த ஒரு அமெரிக்கப் படகு ஜப்பான் கடற்படையினரின் தாக்குதல் காரணமாக இன்று மூழ்கடிக்கப்பட்டது. மூழ்கடிக்கப்பட்ட அந்தப் படகில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய  ஜான்.எஃப்.கென்னடி தான் பின்னாளில் அமெரிக்க அதிபரானார். 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...