Skip to main content

ஆகஸ்ட் 9

 ஆகஸ்ட்  9,1892

 ஒரே நேரத்தில் செய்தி அனுப்பவும் செய்தியைப் பெறவும் என இரு வழியில் செயல்படும்  இருவழி தந்திக்கான  காப்புரிமம்  இன்று தாமஸ்  ஆல்வா எடிசனுக்கு வழங்கப்பட்டது . 

ஆகஸ்ட்  9,1897

விடுதலைப் போராட்ட வீரர் ஈ.கிருஷ்ண ஐயர் பிறந்த தினம். 

ஆகஸ்ட் 9,1910

மின்சாரத்தால் இயங்கும் வாஷிங் மெஷின் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்காக ஆல்வா பிஷர் என்ற அமெரிக்க விஞ்ஞானிக்கு இன்று காப்புரிமம் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட்  9,1941

தமிழறிஞர் க. ப. அறவாணன் பிறந்த நாள். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியவர். 

23 டிசம்பர்  2018  இவர் மறைந்த நாள்.  இவருடைய மறைவுக்குப் பிறகு இவர் விட்டுச்சென்ற பதிப்பக மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளை இவருடைய துணைவியார் தாயம்மாள் அறவாணன் தொடர்ந்து வருகிறார்.


ஆகஸ்ட்  9,1945

ஜப்பானின்  நாகசாகி நகர் மீது  அமெரிக்கா   பேட் மேன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியதில் 35,000 பேர் கொல்லப்பட்டனர். இது நாள் வரையிலும் இதுதான்  அணுகுண்டு போரில் பயன்படுத்தப்பட்ட  கடைசி நிகழ்வாகும். 

ஆகஸ்ட்  9,1965

மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய சிங்கப்பூர் இன்று தனிநாடானது.  

ஆகஸ்ட்  9,1974 

வாட்டர்கேட் ஊழல் காரணமாக அமெரிக்க அதிபர்  ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.

ஆகஸ்ட்  9,2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், கவிஞர் பஞ்சு அருணாசலம் மறைந்த நாள். 

ஆகஸ்ட்  9,2023

தமிழகக் கல்வெட்டறிஞர்  செ. இராசு மறைந்த நாள். 

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...