Skip to main content

குருவிகளுக்கே இடமில்லை? யானைகள் பாவம் எங்கு போகும்?

 "முந்தியெல்லாம் அத்தனை குருவி இருக்கும் . இப்போது தான் எதையும் காணோம்". இப்படி யாராவது பேசுவதைக் கேட்டிருப்போம்.

 குருவிகள் மட்டுமல்ல; பல பெரிய பெரிய விலங்குகள் கூட நேற்று இந்தப் பூமியில் இருந்தவை எல்லாம் இன்று எங்கோ மறைந்துவிட்டன.

முன்பு இருந்து தற்போது அந்த இடங்களில் இல்லாமல் மறைந்தவை பல. மனிதர்களுக்குள் வாழ்ந்து பழகிய அல்லது அவ்வப்போது மனிதர்களின் கண்ணில் பட்டவை தான் காணாமல் போய்விட்டனவா என்றால் நிச்சயமாக இல்லை. மனிதர்கள் புழங்காத காட்டுப்பகுதிகளில் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் தன் போக்கில் வாழ்ந்து வந்த காட்டுயிர்கள் கூட உலகம் பூராவும் இப்படி மறைந்து வருகின்றன.

மனித மேலாதிக்கம், பேராசை என அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.

அப்படி மறைந்துவிட்ட சில உயிர்களை அவை உலகத்தில் எங்காவது தப்பிப் பிழைத்து வாழ்கின்றனவா எனப் பார்த்து அதை எப்படியாவது அழியாமல் காப்பாற்றவேண்டும் என்ற முயற்சியும் ஒரு பக்கம் நடக்கிறது. அந்த முயற்சியை captive breeding என்று சொல்லுகிறார்கள். காப்பிட இனப்பெருக்கம் என்று தமிழில் சொல்லிக்கொள்ளலாம். நம்மால் மறைந்த உயிர்களை எப்படியாவது மறுபடி வாழவைத்துவிட வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.

மனிதனுக்கு வெகுகாலம் முன்பாகவே இந்த மண்ணில் பிறந்து மண்ணுக்கு வளம் சேர்த்து தனக்கென ஒரு வாழ்விடம் அமைத்துக் கொண்டு அந்த எல்லைக்குள் வாழ்ந்து வந்தவை மெல்ல மெல்ல தன் வாழ்விடம் சுருங்க, ஒரு கட்டத்தில் வாழ்வதற்கு எந்த இடமும் இல்லாமல் போக பின் வாழ்க்கையை இழந்து அழிவுக்குத் தள்ளப்பட்டவை அவை.

உலகில் அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த சில உயிரினங்கள் காப்பிட இனப்பெருக்க முறையில் இப்படி முற்றாக அற்றுப்போவதிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இதை (Noak's Ark method) நோக்ஸ் அர்க் முறை என்று சொல்லுவார்கள்.

இந்த Noak's Ark முறைக்கு ஒரு முக்கியமான கட்டுப்பாடு உண்டு. எந்த விலங்கை அழியாமல் காப்பாற்ற விரும்புகிறோமோ அது வாழ்ந்து பழக்கப்பட்ட அந்தச் சூழல் காப்பாற்றப்பட வேண்டும். 

 உதாரணமாக மீனுக்குத் தண்ணீர் தான் வாழ்க்கை. ஆனால் எல்லா மீனையும் எல்லாத் தண்ணீரிலும் வாழ வைக்க முடியாது. ஆற்றிலும் குளத்திலும் வாழ்ந்து பழகிய மீன் கடலில் விடப்பட்டவுடன் இறந்துவிடும். கிணற்றுக்குள் வாழ்ந்து பழகிய மீன் ஆற்றின் ஓட்டத்தில் இரை தேடுவதே போராட்டமாகிவிடும். 

அதற்கான பூமி அல்லது வாழிடம் அழிக்கப்படாமல் எங்காவது கொஞ்சம் இருந்தால் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்து பழகிய ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். 

உயிரை வாழ வைப்பது வேறு; உயிரோட்டமாக வைப்பது வேறு.

காடு கரைகளில் வாழ்ந்து பழகியவர்களை நகரத்தில் உள்ள பெரிய வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைக்கும்போது அவர்களால் இயல்பாக இருக்க முடியாமல் ஒரு வெறுமை வந்துவிட இந்த வாழிட நெருக்கம் தான் காரணம்.

 'மண்ணைக் கூட குழந்தை போல' நினைத்து வாழ்ந்த முன்னோர்கள் காலம் மறைய மறைய 'மண்ணுக்குப் பூச்சி மருந்து' என்று இயல்பாகிவிட்டது.

 மண் தன் இயல்பை இழக்கும் போது மண்ணோடு தன்வயப்பட்டு வாழ்ந்து வந்த எல்லா உயிர்களும் மறைந்து போகின்றன. மண் அந்நியப்பட்டுப் போகும்போது மனம் உயிரோட்டத்தை இழந்து பாசாங்கு வாழ்க்கைக்குப் பழகிக் கொள்கிறது.

 பாசாங்கு வாழ்க்கையில் இழந்ததை உயிர்ப்பிக்க முடியாது. ஏனென்றால் வாழ்ந்து பழகிய பூமி மிஞ்சியிருந்தால் தானே Noak's Ark எல்லாம் சாத்தியம்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...