Skip to main content

ஆகஸ்ட் 24

 ஆகஸ்ட் 24,1891

தாமஸ்  ஆல்வா எடிசன் அசையும் படக்கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

ஆகஸ்ட் 24,1906

எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் இன்று பிறந்தார். 

ஆகஸ்ட் 24,1927

 நடிகை அஞ்சலிதேவி இன்று பிறந்தார். 

ஆகஸ்ட் 24,1929

பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் இன்று பிறந்தார். 

ஆகஸ்ட் 24,1961

விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை மறைந்த நாள்.

ஆகஸ்ட் 24,1972

நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை மறைந்த நாள்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை  தெய்வ பக்தியும் தேச பக்தியும் நிறைந்தவர். காந்தியக் கவிஞர் என்று போற்றப்பட்டவர்.

''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது... 

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்'' 

என்று  பாடிய உப்புச்சத்தியாகிரக வழிநடைப் பாடல்  மூலம் எல்லோருக்கும் அறிமுகமானவர். 

'தமிழன் என்றோர் இனமுண்டு, 

தனியே அவர்க்கொரு குணமுண்டு; 

அமிழ்தம் அவனுடைய மொழியாகும், 

அன்பே அவனுடை வழியாகும்'' என்று பாடியவர். 


ஆகஸ்ட் 24,1986

ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார் மறைந்த நாள். 

ஆகஸ்ட் 24,1991

உக்ரைன் இன்று சோவியத் யூனியனிலிருந்து விலகி தனி நாடானது.

ஆகஸ்ட் 24,1995

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 95 வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 24,2006

புளூட்டோ ஒரு கோள் அல்லவெனவும்  அது ஒரு குறுங்கோள் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது. இது வரை சூரியனுக்கு ஒன்பது கோள்கள் என்று நம்பிக்கொண்டிருந்ததை மாற்றி,   எட்டுக்  கோள்கள் தான் என்று உலகம் முழுதும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

ஆகஸ்ட் 24,2014

காந்தி திரைப்படத்தின் மூலம் இந்திய மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஆங்கில நடிகர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ இன்று காலமானார்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...