Skip to main content

ஆகஸ்ட் 25

 ஆகஸ்ட் 25, 1819

நீராவி இஞ்சினைக் கண்டுபிடித்து தொழில் புரட்சிக்கு முக்கியமான காரணமாக விளங்கிய ஜேம்ஸ் வாட்  இங்கிலாந்தில் இன்று காலமானார்.

ஆகஸ்ட் 25, 1867

டைனமோவைக் கண்டுபிடித்த மைக்கேல் பாரடே  இங்கிலாந்தில் இன்று காலமானார்.

ஆகஸ்ட் 25, 1906

வாரியார் ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம்.


எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடமாகச் சொல்லும் திறன் பெற்றிருந்தார். சிறு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

முறையான சங்கீதப் பயிற்சி பெற்றிருந்தவர். வீணை வாசிப்பதில் சிறந்து விளங்கியவர். அதனால் இவர் தன்னுடைய ஆன்மீகச் சொற்பொழிவுகளில் இசையோடு நகைச்சுவை கலந்து எளிய தமிழில் பேசி எல்லோருடைய விருப்பத்துக்கும் உரியவராக விளங்கினார்

1993 நவம்பர் 7 இல் இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை முருகனைப் பாடுவதையும் பேசுவதையும் ஓய்வறியாமல் செய்துவந்தவர்.

ஆகஸ்ட் 25, 1961 

உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை போன்றவற்றையும் தன்னுடைய பேச்சுத்தமிழிலேயே கொண்டு வந்தவரான தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை மறைந்த தினம்.

இவர்  எழுதிய தமிழின்பம் என்ற நூலுக்கு 1955 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 25, 1970 

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்  மறைந்த நாள்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்  சென்னை மாகாணத்தில் இருந்த, திண்டிவனத்துக்கு அருகில் உள்ள   ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம்  ஆண்டு  பிறந்தார்.

சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார்.

இன்று ஹைதராபாத் நம் நாட்டுடன் இருப்பதற்கு முக்கியமான காரணம் இவர் தான்.  

ஹைதராபாத்துக்கு விமானம் மூலம்பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன என  படேலுக்கு ஒமந்தூரார் எச்சரிக்கை செய்தார்இவருடன் ஆலோசனை செய்த பிறகே உள்துறை அமைச்சர் சர்த்தர் வல்லபாய் படேல்  ஹைதராபாத் மீது இராணுவ  நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.  ஹைதராபாத்  இந்தியாவோடு  இணைக்கப்பட்டது

முதலமைச்சர் பதவியிலிருந்து  விலகிய பின் வடலூரில் விவசாயம் செய்துவந்தார்.  

வடலூரிலுள்ள சன்மார்க்க நிலையம்இவர் அமைத்தது தான்

வள்ளலார் குருகுலப் பள்ளிஅப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம்சான்றோர் இல்லம் எனப் பல நிறுவனங்களை அவர் தொடங்கினார்.

ஆகஸ்ட் 25, 1989

தமிழ் இமயம் என்று அழைக்கப்பட்ட  டாக்டர் வ. சுப. மாணிக்கம்  மறைந்த நாள்.

ஆகஸ்ட் 25, 2018

சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப்பிரிந்த கணவன் இன்னும் வீடு திரும்பலே ..

என்ற இனிய குழைவான குரலுக்குச் சொந்தக்காரரான பின்னணிப் பாடகி எம். எஸ். இராஜேஸ்வரி  மறைந்த நாள். 

களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில்  குழந்தைகள் பாடுவதாக வரும் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற படலைப் பாடியதும் இவர் தான்.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...