Skip to main content

ஏப்ரல் 3

 ஏப்ரல் 3, 1773

ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாள் இன்று.

இவருடைய தந்தை ஒரு விவசாயி தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த முதல் பிள்ளை இவர்.  ஆரம்ப காலத்தில் உழவுத் தொழில்தான் செய்து வந்தார். 11 வயதில் தந்தையை இழந்த பின்பு தன் ஒன்றுவிட்ட அண்ணனிடம் வளர்ந்தார். அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அமெரிக்க விடுதலைக்காக போராடுகின்ற விடுதலைப் படைக்கு தலைமை தாங்கி போரிட்டு தன்னாட்டிற்கு வெற்றியும் தேடித் தந்தார். விடுதலை பெற்ற நாட்டிற்கு முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் அவர். சிறிய வயதிலேயே அவர் அந்த நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணினார். அவரது ஆசைப்படியே அவர் முயற்சி செய்தார். ஜனாதிபதியாகவும் ஆனார். போட்டியின்றி இரண்டு முறை அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வர்ஜீனியாவில் இன்று தான் பிறந்தார்.

ஏப்ரல் 3, 1981

ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை மறைந்த தினம்.

ஒளவையார் குப்பம் என்ற தன் ஊர்ப்பெயரை தன் பேரோடு சேர்த்துவைத்துக்கொண்டதால்  ஒளவை.சு.துரைசாமிப் பிள்ளை என்றே எல்லோராலும் அறியப்பட்டவர் அவர்.


தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் 1902 செட்டம்பர் 5 ல் பிறந்தார்.

 

வேங்கடசாமி நாட்டாரிடத்தும் கரந்தைக் கவியரசரிடத்தும் தமிழ் பயின்றார். வட ஆர்க்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம், செங்கம். சேயாறு. போளூர் உயர் நிலைப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். கரந்தைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில், தமிழ்வேள் உமாமகேசுவரனால் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். ஆசிரியப்பணி புரிந்து கொண்டே, தமிழ்ப்பாடம் பயின்று சென்னைப் பல்கலைக்கழக "வித்துவான்" தேர்வில் வெற்றி பெற்றார்.

 

திருப்பதி திருவேங்கடவன் கீழ்திசைக் கல்லூரியில் பேராசிரியர்,

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறை விரிவுரையாளர், மதுரை தியாகராயர் கல்லூரியில் பேராசிரியர் என அவர் பல ஆண்டுகள் பணியாற்றி1968-இல் ஓய்வு பெற்றார்.

1981ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் காலமானார்.


தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ஒளவைநடராஜன் இவர் மகன் தான். 

அவர் எழுதிய நூல்கள் :

    ஐங்குறுநூறு உரை
    ஒளவைத் தமிழ்
    சிலப்பதிகார ஆராய்ச்சி
    சிலப்பதிகாரச் சுருக்கம்
    சிவஞானபோதச் செம்பொருள்
    சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
    சீவக சிந்தாமணிச் சுருக்கம்
    சூளாமணி
    சைவ இலக்கிய வரலாறு
    திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
    திருவருட்பா மூலமும் உரையும் 
    தெய்வப்புலவர் திருவள்ளுவர்
    நந்தாவிளக்கு
    நற்றிணை உரை
    பதிற்றுப்பத்து உரை
    பரணர்
    புதுநெறித் தமிழ் இலக்கணம்

    புறநானூறு மூலமும் உரையும் 
    மணிமேகலை ஆராய்ச்சி
    மணிமேகலைச் சுருக்கம்
    மத்த விலாசம்(மொழிபெயர்ப்பு)
    யசோதர காவியம் மூலமும் உரையும்
    Introduction to the Study of Thiruvalluvar
    தெய்வப் புலவர் திருவள்ளுவர்
    புது நெறித்தமிழ் இலக்கணம்
    பண்டை நாளையசேர மன்னர் வரலாறு

ஏப்ரல் 3, 1914

இந்திய ராணுவ தளபதி ஆக இருந்த  மானெக் ஷா  இன்று தான் பிறந்தார்.

ஏப்ரல் 3, 1981

தமிழின முனிவர் என்றும் தமிழ் அரிமா என்றும் புகழ்பெற்ற அவ்வை சு.துரைசாமி பிள்ளை காலமானார்.

ஏப்ரல் 3, 1981

இந்திய விண்வெளி வீரர் ராஜேஷ் சர்மா உட்பட மூன்று விண்வெளி வீரர்களுடன் சோயஸ் T- 11 என்னும் விண்கலம் செலுத்தப்பட்டது.





Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...