Skip to main content

மார்ச் 27

 

மார்ச் 27, 1899

வானொலி ஒலிபரப்பு மார்க்கோனியால் முதன்முதலாக உலக  அளவில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இங்கிலீஷ் கால்வாய்க்கு மறுகரையில் சுமார் 52 கிலோமீட்டர் தூரம் வரை மோர்ஸ் சிக்னல் ஒலிபரப்பப்பட்டது.

மார்ச் 27, 1892

உரைநடைக் கவிதை எழுதி உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பெருங்கவிஞர் வால்ட் விட்மன் இன்று காலமானார். புல்லின் இதழ்கள் (Leaves of Grass) என்னும் இவரது கவிதை அமெரிக்கக் கவிதை உலகில் புதிய திருப்பத்தை உண்டு பண்ணியது. இந்தியா செல்லும் வழி (Passage to India) இவரது புகழை உயர்த்தியது.

மார்ச் 27, 1892

சுவாமி விபுலாநந்தர் பிறந்த நாள். 

மார்ச் 27, 1968

விண்வெளியில் பறந்த முதல் ரஷ்ய விண்வெளி வீரர் கர்னல் யூரி கஹாரினும் மற்றொரு விண்வெளி வீரர் கர்னல் விளடிமிர் செரியோஜினும் விமான விபத்தில் மாண்டனர்.

ககாரின்  விண்ணில் பயணித்த நாளான 1961 ஏப்ரல் 12 அன்று சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் இருந்தார்.

இந்த நாள்  மனித சமுதாயம் பூமிக்கு வெளியே தன்னுடைய ஆதிக்கத்தைத் தொடங்கிய நாள்.  

2001 ஆம் ஆண்டு முதல்,  ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ம் தேதி  யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. இது யூரியின்  சாதனையை  எப்போதும் நினைவுபடுத்தும். 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...