Skip to main content

மார்ச் 30

 

மார்ச் 30, 1692

வேளாண்துறையில் கால்நடை வளர்ப்பும் வாணிபமும்  என்ற பெயரில் முதல் பத்திரிக்கை வெளிவந்தது.

மார்ச் 30, 1709

தான் எழுதிய தொடர்ச்சியான நாட்குறிப்பு மூலம் ஒரு வரலாற்று ஆவணத்தை வழங்கிய ஆனந்தரங்கம் பிள்ளை  பிறந்த  தினம். 

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெ னியின் அலுவலராகவும்  துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். 1736 செப்டம்பர் 6 முதல் 1761 ஜனவரி 11 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இடைவிடாமல் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 

உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடி என்று சாமுவேல் பெப்பீசு என்பவரைச் சொல்கிறார்கள்.

பெப்பீசு எழுதிய காலத்தை விட அதிகமான காலம் எழுதியதோடு அதை ஒரு வரலாற்று ஆவணம் போல வழங்கியதில் சாமுவேல் பெப்பீசு எழுதியதை விட இவரது நாட்குறிப்பு சிறப்பானது.  

இந்தியாவின் பெப்பீசு என்பது இவருக்கு வழங்கப்படும் அடைமொழி. 

இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. இன்றும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. 

மார்ச் 30, 1842

ஒரு மாணவனின் கழுத்தில் ஏற்பட்டிருந்த சீழ்க் கட்டியை முதன் முதலாக மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தினார் ஜெபர்ஷனைச் டாக்டர் கிராபோர்ட்  லாங்க். இப்படி மயக்க மருந்து கொடுத்து ஒன்பது அறுவை சிகிச்சைகளை அவர் செய்தார். ஆனால் அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் இவரை சூனியக்காரர் என்று குற்றம் சாட்டி மேலும் த்தகைய சிகிச்சைகளைச் செய்தால் அவரைக் கொன்று விடுவதாக பயமுறுத்தவே அவர் இந்த சிகிச்சை முறையைக் கைவிட்டுவிட்டார்.

மார்ச் 30 ,1858

பென்சிலுடன் ரப்பரைப் பொருத்தி பென்சில் தயாரிப்பதற்கு பிலடெல்பியாவைச் சேர்ந்த ஹைமன் லிப்மன் என்பவர் காப்புரிமை  பெற்றார்.

மார்ச் 30 ,1861 

ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரோடு சமகாலத்தில் துறவறம் பெற்றவருமான சுவாமி யோகானந்தர் பிறந்த நாள். 

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஈசுவர கோடிகள் என்று அடையாளம் காட்டிய ஆறு இளைஞர்களுள் சுவாமி யோகானந்தரும் ஒருவர். 

சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு மே முதலாம் தேதி கல்கத்தாவில்  ராமகிருஷ்ண மிஷனைத் தொடங்கியபோது துணைத் தலைவராக இவரைத் தேர்ந்தெடுத்தார்.

மார்ச் 30 ,1908 

இந்தியாவில் திரைப்படத் துறையில் சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டபோது அந்த விருதை முதல் முதலாகப் பெற்றவர் நடிகை தேவிகா ராணி சௌத்திரி ரோரிக். இன்று அவர் பிறந்த நாள். 

மார்ச் 30, 1953

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மின்காந்தத் திசை, ஈர்ப்பு திசை, சார்பியல் கொள்கை    ஆகியவற்றை இணைக்கும் Unified field theory என்ற தேற்றத்துக்கான  கணக்கியல் சமன்பாட்டை அறிவித்தார்.

மார்ச் 30, 1954

ராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதைத்  தொடர்ந்து காமராஜர் சட்டசபை காங்கிரஸ் தலைவராகத் தேர்வானார்.

மார்ச் 30, 1984

கவிஞரும்  இந்தியாவிலேயே முதன் முதலாக கலைக் களஞ்சியம் உருவாக்கியருமான பெரியசாமி தூரன் காலமானார்.

மார்ச் 30,  2005

மலையாள மொழி  எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவரான  ஒ. வி. விஜயன் மறைந்த நாள். 


 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...