Skip to main content

மார்ச் 11

 மார்ச் 11, 1898

 சுவாமி சிவானந்தர் பிறந்த நாள்.

திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையைப் பார்க்கும்போதெல்லாம் சுவாமி சிவானந்தரின்  நினைவு வருவது இயற்கை.

அவர் அமைத்தது தான் அந்தத் தபோவனம். 

இவர் தன் தொடக்கக் கல்வியை ஸ்டேன்ஸ் ஆங்கிலப் பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியை சீனியர் கேம்பிரிட்ஜிலும் தொடங்கி மிகுந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றார்.

1920 முதல் 1923 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். மயிலை ராமகிருஷ்ண மடத்துக்கு அடிக்கடி சென்று வருவார்.  அப்போது அங்கே மடத்தின் தலைவராக இருந்த சுவாமி  பிரம்மானந்தரின் தொடர்பு ஏற்பட்டது.அதன் வழியே பேலூர் ஆசிரமம் சென்றார்.   1926 இல் ஊட்டியில்  முழுத் துறவு பெற்றார். 

ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் ஆன்மீக நெறியைக் கொண்டு தனது ஞான மார்க்கத்தை அமைத்துக் கொண்டவர் இவர்.   திருப்பராய்த்துறையில் தபோவனத்தையும் கல்விச் சாலையையும் நிறுவினார்.  படிப்பது மனனம் செய்வது மதிப்பின் பெறுவது என்பது மட்டுமே கல்வி அல்ல முழுமையான மன வளர்ச்சியை கொடுப்பது மட்டுமே கல்வியின் நோக்கம் என்பதை உணர்த்திக் காட்டினார். பள்ளிப் பாடத்தில், கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்தார். உடல் வலிமையும் ஒரு கல்விதான் என்று கருதி உடலை காக்கவும் பாடத்திட்டத்திற்குள் ஏற்பாடு செய்தார்.


ராமகிருஷ்ண விஜயம் என்ற இதழின் ஆசிரியராக இருந்ததோடு 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது உரையோடு வெளிவந்துள்ள கீதையும் திருவாசகமும் ஒரு அறிவுக் களஞ்சியம்.

இவர் பொள்ளாச்சி அருகேயுள்ள செங்குட்டைப்பாளையம் என்னும் ஊரில் பி. கே. பெரியண்ண கவுண்டர், நஞ்சம்மையார் ஆகியோருக்கு மகனாக இன்று தான் பிறந்தார். சின்னுக் கவுண்டர் என்பது அவருடைய இயற்பெயர்.

மார்ச் 11, 1912

கோவை  பீளமேட்டில் பிறந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர்  என். ஜி. ராமசாமி பிறந்த நாள். 

மார்ச் 11, 1927 

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் வி. சாந்தா பிறந்த நாள். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின்  தலைவராகப் பணியாற்றியவர். இவர்  பத்மஸ்ரீ , பத்ம விபூஷன் போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்ற பெருமை கொண்டவர்  இவர்.  

மார்ச் 11, 1948 

விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட முதல் இந்திய கப்பல் ஜல உஷா இன்று மிதக்க விடப்பட்டது.

மார்ச் 11, 1955

பெனிசிலினை பெனிசிலியம்  என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்த  அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் இன்று மறைந்தார். 

மார்ச் 11, 1992 

சென்னையில் கடற்படை ராஜோலி விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...