Skip to main content

மார்ச் 17

 மார்ச் 17 1845 

எலாஸ்டிக் தன்மையுடைய ரப்பர் பாண்டுகள் செய்வதற்கு இன்று ஸ்டீபன் பெரி என்பவருக்கு காப்புரிமம் வழங்கப்பட்டது. இதே நாளில் அவர் உற்பத்தியையும் துவக்கி விட்டார்.

 மார்ச் 17 1920 

பங்களாதேஷ் நாட்டின்  தந்தை என அறியப்படும் ஷேக்  முஜிபுர் ரகுமான் பிறந்த நாள். 

பாகிஸ்தான் பிரிவதற்கு முன் கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர் இவர்.  அவாமி லீக் என்ற கட்சியின் தலைவராஇருந்தார். பங்களாதேஷ் உருவான பிறகு முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது பிரதமராக இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர். இவர் குடும்பத்தில் உயிர்தப்பிய இவருடைய மகள் சேக் ஹசீனா பங்களாதேஷ் பிரதமராக இருந்தவர். தற்போதைய பங்களாதேஷ் கலவரங்களுக்குப் பின் ஷேக் ஹசீனா  இந்தியாவில் ஒரு பாதுகாப்பான பகுதியில் தங்கியுள்ளார். 

மார்ச் 17 1935

திரைப்பட நடிகர் மேஜர் சுந்தரராஜன் பிறந்த நாள். 

மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தில் இவரது நடிப்பு பெரும்பாரட்டைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சுந்தர்ராஜன் என்ற இவரது பெயரோடு மேஜர் சேர்ந்துவிட்டது. பின்னாளில்  அந்த நாடகம் மேஜர் சந்திரகாந்த் என்ற அதே பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதிலும் இவரே நடித்திருந்தார். 

திரைப்படங்களில் இவர் பேசும் வசனங்களில் இவரது  உச்சரிப்பு தெளிவாக இருக்கும். அதனாலேயே படிப்பறிவில்லாதவர்களும் கூட இவருடைய வசனத்தை மனப்பாடமாகச் சொல்வார்கள்.  

 மார்ச் 17 1962

கல்பனா சாவ்லா இன்று ஹரியானா மாநிலம்  கர்னூலில் பிறந்தார்.  

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...