Skip to main content

மார்ச் 14

 மார்ச் 14, 1794 

பருத்திக் கொட்டையிலிருந்து பஞ்சைத் தூய்மைப்படுத்திப் பிரித்தெடுக்கும் காட்டன் ஜின்  என்னும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த எலி விட்னி இன்று அதற்கான காப்புரிமம்  பெற்றார்.

மார்ச் 14, 1879

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாள்.

ஜெர்மனியில் பிறந்த ஐன்ஸ்டீன் 1940ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.

1905 இல் அவர் வெளியிட்ட சார்பியல் கொள்கை உலகம் முழுவதும் அவரது புகழை பரவச் செய்தது. 

அவர் வெளியிட்ட விஞ்ஞான உண்மைதான் அணுகுண்டு தயாரிப்பதற்கு அடிப்படை . அதனால் ஏற்பட்ட அழிவைக் கண்டு அவர் பெரிதும் வருந்தினார். போரை எதிர்த்து இறுதி வரை பேசி வந்தார்.

உலகத்தில் என்றும் மாறாமல் இருப்பது ஒளியின் வேகம் ஒன்றுதான். மற்ற எல்லாமே மாறக்கூடியவை என்பது அவரது ஒரு கொள்கை.

சார்பியல் கொள்கை தவிர வேறு சில உண்மைகளையும் அவர் கண்டறிந்து கூறினார்.

ஒளி என்பது போட்டான் எனப்படும் ஆற்றல் துகள்களால் ஆனது. 

பொருளையும் ஆற்றலையும் ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும்.

திரவத்தில் மிதக்கும் துகள்களின் வேகமான இயக்கம் பற்றிய விளக்கம்.

இவை எல்லாம் அவரது கண்டுபிடிப்புகள். 

E=mc2 என்பது அவரது புகழ்பெற்ற ஒரு சூத்திரம். அணு சக்தியின் அடிப்படையே  இதுதான்.

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு 1921 இல் நோபல் பரிசு கிடைத்தது. 

pi day: 

ஐன்ஸ்டின் பிறந்த நாள் மார்ச் 14 . 

அது கணக்கில் pi இன் மதிப்பான 3.14 என்பதை நினைவு படுத்தும் ஒரு நாள். அதனால் இந்த நாள் pi  day என்றும் குறிப்பிடப்படுகிறது.

மார்ச் 14, 1918

 இசை­ய­மைப்­பாளர் கே. வி. மகாதேவன் பிறந்த நாள். 

சிவா­ஜியின் வசந்­த­மா­ளிகை,     

தில்­லானா மோக­னாம்பாள்,  

எம்.­ஜி. ­ஆரின் அடி­மைப்பெண், 

நல்­ல­நேரம்  மற்றும் 

திரை இசையில் வேறொரு பரி­மா­ணத்தைக் காட்­டிய சங்­க­ரா­ப­ரணம் போன்ற  பல படங்­களின் இசை­ய­மைப்­பாளர் இவர்.

காலத்தால் அழி­யாத எஸ்.­பி.­பி.யின் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை எம்­.ஜி­.ஆ­ருக்­காக அடி­மைப்­பெண்ணில் உரு­வாக்­கி­ய­வரும் இவரே.

1988 ஆம் ஆண்டு வெளி­வந்த “பாய்­ம­ரக்­கப்பல்” படத்தில் எஸ்­.பி.பி. இவரின் இசையில் பாடிய "ஈரத் தாமரைப் பூவே.." ஒரு அருமையான மெலடி. 

கே. வி. மகாதேவன் பாடல்களை இன்று கேட்டாலும்  கர்நாடக சங்கீதத்தை இத்தனை எளிமைப்படுத்த முடியுமா என்று  வியப்பாக இருக்கும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தமிழில் மட்டும்   218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 வரை திரையுலகில், இசையுலகில் புகழோடு விளங்கினார்.   

மார்ச் 14, 1931 

இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா திரையிடப்பட்டது.

மார்ச் 14,  2018

வானவியல் அறிஞரும் ஆசிரியருமான ஸ்டீப ன் ஹாக்கிங்  மறைந்த நாள்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...