Skip to main content

மார்ச் 24

 மார்ச் 24 1766 

இந்தியாவில் அஞ்சல் முறை ஆரம்பிக்கப்பட்டது.

மார்ச் 24 1882 

காச நோயை உண்டாக்கும் மைக்கோ பாக்டீரியம் என்னும் கிருமியை ராபர்ட் கோச் எனும் ஜெர்மனி விஞ்ஞானி இன்று கண்டுபிடித்தார்.

மார்ச் 24 1905

தமிழ் இலக்கிய உலகில் மணிக்கொடி என்ற பெயரைப் பதிய வைத்த பி எஸ் ராமையா இன்று வத்தலக்குண்டு ஊரில் பிறந்தார்.

எழுத்துலகில் புரட்சியையும் புதுமையையும் உருவாக்கிய பத்திரிக்கை மணிக்கொடி. இதை ஆரம்பித்தவர் கே சீனிவாசன். இவர் விடுதலைப் போராட்ட வீரர். இவர் தொடங்கிய இந்தப் பத்திரிக்கையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் பணியாற்றினார்கள். அந்தப் பட்டியலில் மூத்த எழுத்தாளர் பிஎஸ் ராமையாவும் ஒருவர்.  இப் பத்திரிகையின் தொடக்க கால ஆசிரியராக இருந்த வ.ரா இலங்கை வீரகேசரி பத்திரிக்கைப் பணிக்குச் சென்றதும் ராமையா மணிக் கொடியின் ஆசிரியர் ஆனார்.

புது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பத்திரிக்கையை நடத்தினார். அந்தக் காலத்தில் தரமான சிறுகதைகளை இலக்கிய நயத்தோடு வெளியிட்ட பத்திரிக்கை எது என்று கேட்டால் மணிக்கொடி என்று தயங்காமல் சொல்வார்கள். ஐந்தாவது வரையே படித்தவர் இவர். சென்னை வந்து கூலி வேலை செய்யும் தொழிலாளியாக பணி தொடர்ந்தார். அப்போது அவருக்கு தினக்கூலி பத்தணா மட்டுமே. 

இந்த வேளையில் தான் இந்திய விடுதலைப் போர் சூடு பிடித்துக் கொண்டு இருந்தது. அதில் கலந்துகொண்டு சிறை சென்றார். இவரின் முதல் சிறுகதை 1933 ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. மலரும் மனமும் என்பது அக்கதையின் பெயர். சிறப்பான நாடகங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய படைப்புகள் திரைப்படமாகவும் வந்துள்ளன. போலீஸ்காரன் மகள் திரைப்படம்  இவர் எழுதிய நாடகம் தான். 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆறு நாடகங்களையும் மூன்று நாவல்களையும் எழுதி உள்ளார். இவர் பல எழுத்தாளர்களை உருவாக்கினார் என்பதோடு இவர் படைப்புகளை படித்தவர்கள் எழுத்தாளர்கள் ஆனார்கள் என்றும் சொல்லலாம். இவரது மணிக்கொடி காலம் என்ற நூலுக்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டது.

மார்ச் 24 1922

காலம் கடந்தும் காற்றில் உலாவரும் குரலுக்குச் சொந்தமான தமிழ்த்  திரைப்படப் பின்னணிப் பாடகர் சௌந்தரராஜன் பிறந்தநாள். 

மார்ச் 24 1933

தற்செயலாக இன்று பாலித்தீன் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உற்பத்தி செய்தால் தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்படும் அபாயமும் அப்போது இருந்தது.  எனவே அத் தொழிற்சாலைகள் அவ்வப்போது உற்பத்தியை நிறுத்திவிட்டு எந்திரங்களை சுத்தம் செய்து உற்பத்தியை மீண்டும் துவக்கி பாலித்தீன் உற்பத்தி  செய்தனர்.

மார்ச் 24 1947 

மவுண்ட்பேட்டன் இந்தியாவின் வைஸ்ராயாக பதவியேற்றார்.

மார்ச் 24 1975 

சங்கீத கலாசிகாமணி முசிறி சுப்பிரமணிய ஐயர் காலமானார். இசைப் பேரறிஞரான இவர் பத்மபூஷன் பட்டம் பெற்றவர்.

மார்ச் 24 1977 

காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது. மொராஜி தேசாய் தலைமையில் புதிய ஜனதா அரசு உதயமானது. இவர் தான் காங்கிரஸ் கட்சியைச் சேராத முதல் பிரதமர். 

மார்ச் 24 1984 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

மார்ச் 24 2020 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்று இந்திய முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...