Skip to main content

மார்ச் 23

மார்ச் 23 1893

தமிழக அறிவியல் மாமேதைகளுள் ஒருவரான  ஜி.டி. நாயுடு  பிறந்த நாள். 

மார்ச் 23 1910

விடுதலைப் போராட்ட வீரர்  ராம் மனோகர் லோகியா பிறந்த தினம். 

நாடு விடுதலை பெற்ற பிறகு சமூகப் பணிக்காகவே தன்னுடைய நேரத்தைச் செலவிட்டவர் இவர். அதற்காக, கடைசிவரை திருமணமே செய்து கொள்ளாமல்  வாழ்ந்த தன்னலமற்ற தியாகி இவர். 

 மார்ச் 23 1921

புகழ் பெற்ற நாவலாசிரியை லக்ஷ்மி  பிறந்த தினம்.  

தன்னுடைய மருத்துவப் படிப்புக்குப் பணம் வேண்டும் என்பதற்காக எழுத ஆரம்பித்தவர் இவர். மருத்துவரான போதும் இலக்கிய உலகில் ஆர்வம் கொண்டு இறுதிவரை எழுதிவந்தவர். 

 மார்ச் 23 1931 

லாகூர் சதி வழக்கை விசாரித்த ஸ்பெஷல் ட்ரிபியூனல்  தீர்ப்புப்படி பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூவரும் மாலை 7 மணிக்கு லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.  

மறுநாள் சட்லெட்ஜ்  நதிக்கரையில் ஹிந்து, சீக்கிய முறைப்படி அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாகவும் அவர்களது உடைமைகள் ஆற்றில் தூக்கி எறியப்பட்டதாகவும் அரசு அறிவித்தது.

மார்ச் 23 1933 

ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார்.

மார்ச் 23 1956 

பாகிஸ்தான் தனது நாட்டை இஸ்லாமிய குடியரசு என்று அறிவித்தது. உலகிலேயே முதல் இஸ்லாம் குடியரசு இதுதான்.

மார்ச் 23 1988 

பிரபல தமிழ் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் மறைந்த நாள்..

சீர்காழி என்ற  ஊரின் பெயரைச் சொன்னதும் முதலில் அது ஊர் என்று நம் நினைவுக்கு வருவதில்லை. அங்கு பிறந்து வளர்ந்து  தன் காந்தக் குரலாலே எல்லோரையும் கவர்ந்த   சீர்காழி எஸ். கோவிந்தராஜன் முகமே நம் நினைவுக்கு வரும். 

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா...

எங்கிருந்தோ வந்தான் ... இடைச்சாதி நான் என்றான்....

தேவன் கோயில் மணியோசை ...

போன்ற பாடல்கள் காற்றில் வரும்போதே கண்கள் பாதி மூட.. . செவியில் நுழைந்து மனதில் நிறைவதை உணர்ந்து சிலிர்த்திருக்கும் அனுபவம் வார்த்தைகளில் சொல்ல முடியாதது. 

கோவில் திருவிழாக்கள் என்றாலே சீர்காழி கச்சேரி என்பது ஒரு காலத்தில் வழக்கமாக அமைந்திருந்தது. 


மார்ச் 23, 2015 

சிங்கப்பூரின் தந்தை எனக் குறிப்பிடப்படும்  ச் லீ குவான் யூ  மறைந்த நாள். சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் இவர் தான். 

மார்ச் 23, 2017 

தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் மறைந்த  நாள். 

இவருடைய `அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாடெமி விருது வழங்கப்பட்டது.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...