Skip to main content

மார்ச் 9

மார்ச் 9, 1851 

மின்காந்தத்தைப் பற்றிக் கண்டுபிடித்து உறுதிப்படுத்திய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓர்ஸ்டேட் என்னும் டென்மார்க் அறிவியலாளர் காலமானார்.  அதுவரை மின் விசையும் காந்த விசையும் தனித்தனியான விசைகள்  என்ற கூலும்பின் கருத்தே இயற்பியலில் நிலவி வந்தது.

மார்ச் 9, 1876 

அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் தொலைபேசி செய்வதற்கான காப்புரிமை பெற்றார்.



மார்ச் 9, 1908
பழம்பெரும் நடிகை தேவிகா ராணி சௌத்திரி பிறந்த நாள்.
திரைப்படக் கலைஞர்களுக்காக வழங்கப்படும்  தாதா சாகெப் பால்கே விருது  முதன்முதலாக இவருக்குத்தான் வழங்கப்பட்டது.

மார்ச் 9, 1934
 
முதன் முதலாக விண்வெளிக்குச் சென்ற ரஷ்ய விண்வெளி வீரர்  யூரி  ககாரின் பிறந்த நாள். விண்ணில் இருந்தவாறே  பூமியை வலம் வந்த முதல் மனிதர் என்ற பெருமையும் இவருக்கே சொந்தம். 1961 ஏப்ரல் 12 அன்று இந்த சாதனையை நிகழ்த்தினார். 

மார்ச் 9, 1951

தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் ஹூசைன் பிறந்த நாள். 

மார்ச் 9, 1954

பின்னணிப் பாடகர் டி. எல். மகாராஜன் பிறந்த நாள். 

இவரின் தந்தை  திருச்சி லோகநாதனும் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் தான். 

மார்ச் 9, 1988 

திரைப்பட இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாஸ் லட்சத் தீவில் காலமானார்.

மார்ச் 9,  2003 

தமிழ்மொழி தமிழிசை இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றிருந்த முனைவர் வீ. ப. கா. சுந்தரம் மறைந்த நாள். 

தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்ற இவரது நூல்   பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...