Skip to main content

மார்ச் 13

 மார்ச் 13, 1781 

யுரேனஸ் கோள் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மார்ச் 13, 1929 

பென்சிலினின்  தன்மைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரையை லண்டன் மெடிக்கல் ரிசர்ச் கிளப்பில் அலெக்சாண்டர் பிளமிங் இன்று படித்தார்.



மார்ச் 13, 1936

தமிழறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கிய பண்டிதர் கா. ரா. நமச்சிவாய முதலியார் மறைந்த தினம். 

மார்ச் 13, 1969
காஞ்சி காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய பீடாதிபதியான   ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த தினம். 

மார்ச் 13, 1986
 
தொழிலதிபர் மற்றும்  பதிப்பாளர் மர்ரே ராஜம்  மறைந்த நாள். 

மர்ரே நிறுவனத்தில் பணியாற்றி பின்னாளில் அந்த நிறுவனத்தையே நடத்தும் அளவு வளர்ந்தவர் இவர். 

கோவில்களுக்கும் தர்ம காரியங்களுக்கும் கனக்குப் பார்க்காமல் செலவு செய்த தர்மவான் இவர்.  இவருடைய சேவை, இலக்கியத்தை நோக்கித் திரும்ப முக்கியமானவர் பெ. நா. அப்புசாமி . அவர் மூலமாக தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை அறிமுகமானார்.  வையாபுரிப்பிளை வழங்கிய ஆலோசனையினால் தமிழிலக்கியங்களை மலிவுப் பதிப்பில் வெளியிட முனைந்தார்.  வையாபுரிப்பிள்ளையையே பதிப்பாசிரியராகக் கொண்டு பதிப்புப் பணிகளைத்  தொடங்கினார். 

முதல் நூலாக, திவ்யபிரபந்தத்தின் முதலாயிரம் சந்தி பிரிக்கப்பட்டு 1955இல் வெளியானது. வையாபுரிப்பிள்ளை, பெ.நா..அப்புசாமி, மு. சண்முகம் பிள்ளை, வி. மு. சுப்பிரமணிய ஐயர், பி.ஸ்ரீஆச்சார்யா, கி. வா. ஜகந்நாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், ரா.பி.சேதுப்பிள்ளை முதலான தமிழறிஞர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவைக் கொண்டு பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் என்று 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தரமான அச்சில் மலிவு விலையில் வெளியிட்டவர் இவர்.

குறிப்பாக இவர்கள் வெளியிட்ட பேரகராதிகளான வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி , தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி ஆகியன இன்றும் முக்கியமான ஆய்வுக்கு களஞ்சியமாக விளங்குகின்றன. 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...